Friday, October 16, 2009

Daily news letter 16-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் - 16, புரட்டாசி - 30, ஷவ்வால் – 26

 

அவ்வை தமிழ் சங்கத்தின் சார்பாக அனைவருக்கும்  உள்ளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இன்று: உலக உணவு நாள் (World Food Day), ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது. World Food Day 2009 theme: "Achieving food security in times of crisis"

Today in History

1799 - பாஞ்சாலங்குறிச்சி மன்னன் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டான்.

1905 - இந்தியாவில் வங்காள பிரிவை ஏற்பட்டது

1923 - வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1964 - மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.

1973 - ஹென்றீ கிசிங்கர், லே டுக் தோ அமைதிக்கான நோபல் பரிசு பெற்றனர்.

2003 - தமிழ் விக்கிப்பீடியாவில் சிரின் எபாடி பற்றி முதல் கட்டுரை எழுதப்பட்டது

இறப்புகள்

1799 - கட்டபொம்மன், பாஞ்சாலங்குறிச்சி மன்னன் (பி. 1760)

1951 - லியாகட் அலி கான், பாகிஸ்தானின் அரசியல்வாதியும், விடுதலையடைந்த பாகிஸ்தானின் முதலாவது பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் ஆவார். (பி. 1896)

சிறப்பு நாள்: உலக உணவு நாள்

இன்றைய சிறப்பு மனிதர்:

 

வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் முதன்மையான மன்னர் ஆவார்.

ஆட்சிக்காலம்    - கி.பி 1790- கி.பி 1799  (பெப்ரவரி 2, 1790 அன்று 47 வது பாளையக்காரர்)

அரச வம்சம்       - நாயக்க மன்னர்

தந்தை               - ஜெகவிர கட்டபொம்மன்

வாழ்க்கை

பொம்மு மரபில் வந்தவர்களே (திக்குவிசய கட்டபொம்மன்) ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமகத்தம்மாள் தம்பதியர். இவர்களின் புதல்வரே வீரபாண்டியன் எனும் இயற்பெயர் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனாவார்.

இவரது துணைவியார் வீரசக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் இருந்தனர். இவர் 9 ஆண்டுகள், 8 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்தார்.

போர்

அக்டோபர் 1, 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கும்பினியாரிடம் (கிழக்கிந்திய கம்பெனி) ஒப்படைக்கப்பட்டான்.அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார். அவர் தூக்கிலிடப்பட்ட இடத்தில் இன்று ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.

மீண்டும் எழுந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை

1974-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பழங்காலத்துக் கோட்டையின் வடிவினை ஒத்த ஒரு கோட்டையினை அன்றைய தமிழக முதல்வர் திரு. மு.கருணாநிதி எழுப்புவித்தார். கோட்டை, கொத்தளம், கொலுமண்டபம், சக்கம்மா தேவி ஆலயம் அனைத்தும் மீண்டும் தோன்றின. நினைவுக் கோட்டையை உள்ளடக்கிய 6 ஏக்கர் பரப்பினைச் சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. உள்ளே தொல்பொருள் ஆய்வு மையமும் உள்ளது. மண்டபத்தின் உள்ளே கட்டபொம்மனின் வீரவரலாறு ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை 1977 முதல் சுற்றுலாத் துறையின் பராமரிப்பில் இயங்கி வருகிறது.

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.6

குற்றங்கடிதல்

2.1.6

Avoiding faults

437

செயற்பால செய்யா திவறியான் செல்வம்

உயற்பால தன்றிக் கெடும்.

seyaRpAla seyyA thivaRiyAn selvam

uyaRpAla thanRik kedum.

Who leaves undone what should be done, with niggard mind,

His wealth shall perish, leaving not a wrack behind.

பொருள்

Meaning

நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.

The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.

இன்றைய பழமொழி

Today's Proverb

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது

kadugu ciRuththAlum kAram kuRaiyAthu

The mustard its small, but it is still too spicy (literal)

Meaning

Don't measure the worth of a person by their size/shape

Size does not matter.

இன்றைய சொல்

Today's Word

கருமி பெ.

Karumi

பொருள்

Meaning

1.  கஞ்சன் (kanjan)

1.  Miser, niggard

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Thursday, October 15, 2009

Daily news letter 15-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் - 15, புரட்டாசி - 29, ஷவ்வால் – 25

இன்று: இந்தியாவில் பதவி வகித்த ஜனாதிபதிகளுள் மிகவும் எளிமையானவராக விளங்கி, மக்கள் ஜனாதிபதி என்று பெயர் எடுத்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு இன்று 78 வது பிறந்த நாள். இடை முன்னிட்டு அவரின் சொற்பொழிவு அவ்வை தமிழ் சங்க இணையதளத்தில் உங்களுக்காக ஏற்றப்பட்டுள்ளது.

Today in History

1582 - கிரெகொரியின் நாட்காட்டியை பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரி அறிமுகப்படுத்தினார்.

1878 - தோமஸ் எடிசன் தனது மின்குமிழ் தயாரிக்கும் கம்பனியை ஆரம்பித்தார்.

1918 - மகான் ஷீரடி சாய்பாபா சமாதி தினம்

1932 - டாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.

1951 - மெக்சிக்கோவின் லூயி மிரமோண்டெஸ் முதற்தடவையாக கருத்தடை மாத்திரையை அறிமுகப்படுத்தினார்.

2003 - மக்கள் சீனக் குடியரசு முதற்தடவையாக சென்ஷோ 5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.

பிறப்புக்கள்

1542 - பேரரசர் அக்பர், முகலாயப் பேரரசன் (இ. 1605)

1931 - அப்துல் கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர்

1931 - வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (இ. 2003)

இன்றைய சிறப்பு மனிதர்:

 

ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் பதவியில் ஜூலை 25, 2002 முதல் ஜூலை 25, 2007 வரை இருந்தார்.

1998-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி மதியம் 3.45மணி பொக்ரானில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை அமெரிக்காவின் செயற்க்கை கோள்களின் கண்களுக்கு மண்ணைத் தூவிவிட்டு வெற்றிகரமாக நடத்தியது. உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் இந்தியா மீது திரும்பியது.

' நாடு அமைதியாக இருப்பதற்கு ஏவுகணைகள்* மிக அவசியம். இல்லாவிடில் நாம் அன்னிய நாடுகளின் மிரட்டலுக்குப் பயந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கும்' என்று கூறியவர் கலாம். பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேறு பல துறைகளுக்கும் உதவியிருக்கிறார் கலாம் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்த கனத்தில் உலோகக் கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'பேஸ் மேக்கர்' போன்ற கருவிகளை உருவாக்கியுள்ளார்.

அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக குறிப்பிட்டுள்ளார். கலாம் பிறந்த வீடு தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இந்த ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரான தனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது. தண்ணீர் என்பது மிகுந்த அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூட பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்

அக்னிச் சிறகுகள்

எழுச்சித் தீபங்கள்

இந்தியா 2020

india 2010

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.6

குற்றங்கடிதல்

2.1.6

Avoiding faults

436

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு.

thankutRRam n-eekkip piRarkutRRang kANkiRpin

enkutRRa mAkum iRaikku.

Faultless the king who first his own faults cures, and then

Permits himself to scan faults of other men.

பொருள்

Meaning

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others?

இன்றைய பழமொழி

Today's Proverb

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

Erumbu ora kallum theiyum

Even ants can wear out a rock (literal)

 

Meaning

Persistence never fails

இன்றைய சொல்

Today's Word

ஏவுகணை பெ.

EvukaNai

பொருள்

Meaning

1.  தொலைவில் அல்லது உயரத்தில் உள்ள இலக்கின் மீது செலுத்தபடும் எறி ஆயுதம் ( ilakin mEthu seluthappadum eri Ayutham)

1.  missile

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

Wednesday, October 14, 2009

Daily news letter 14-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் - 14, புரட்டாசி - 28, ஷவ்வால் – 24

இன்று: உலகத் தர நிர்ணய நாள் (World Standard Day) என்பது ஆண்டு தோறும் அக்டோபர் 14ம் நாளன்று உலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ஐ.எஸ்.ஓ.), அனைத்துலக மின் தொழில்நுட்ப ஆணையம் (ஐ.ஈ.சி.), அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியம்] (ஐ.டி.யூ.) ஆகிய நிறுவனங்களின் வழிமுறைகளுக்கு உட்பட்டு உலகத் தரங்களை உருவாக்கப் பாடுபடும் தொழில்துறை வல்லுநர்களின் சேவையைப் பாராட்டவும் பொருள்கள் மற்றும் சேவைகளில் விளங்க வேண்டிய சீர்மைத் தன்மையின் அவசியத்தை உலகளாவிய ரீதியில் வலியுறுத்தவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

IEC, ISO மற்றும் ITU என்பன சந்தைகளை உருவாக்கல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், பணக்கார மற்றும் வறிய நாடுகளுக்கிடையேயான வேறுபாடுகளைக் களைவது, போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த 3 அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து 1969ம் ஆண்டிலிருந்து, அக்டோபர் 14-ஆம் தேதியை உலகத் தர நிர்ணய நாளாக அனுசரிக்கின்றன.

Today in History

1888 - Roundhay Garden Scene என்ற முதலாவது அசையும் படத்தை லூயி லெ பிரின்ஸ் தயாரித்தார்.

1926 - சிறுவர் நூல் வின்னீ-த-பூ (Winnie-the-Pooh) வெளியிடப்பட்டது.

1956 - இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.

1964 - ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்

1968 - விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது

பிறப்புக்கள்

1643 - முதலாம் பகதூர் ஷா, இந்தியாவின் முகலாய மன்னன் (இ. 1712)

1927 - அஞ்சலி தேவி, தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகை

1942 - சிவசங்கரி, தமிழக எழுத்தாளர்

இறப்புகள்

1981 - கே. பி. ஹரன், தமிழ்ப் பத்திரிகையாளர் (பி. 1906)

2005 - சுந்தர ராமசாமி, தமிழ் எழுத்தாளர் (பி. 1931)

சிறப்பு நாள்: உலகத் தர நிர்ணய நாள்

இன்றைய சிறப்பு மனிதர்கள்:

 

சிவசங்கரி (பிறப்பு ஒக்டோபர் 14, 1942) ஒரு குறிப்பிடத்தக்க தமிழக எழுத்தாளர். நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.

 

சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீன தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் கவிஞர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதுபவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு பரிமாணங்களில் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவை இவர் எழுத்துக்கள்.

கே. பி. ஹரன் (அக்டோபர் 17,1906 - அக்டோபர் 14, 1981) தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தலைசிறந்த பத்திரிகையாளராக இருந்தவர்.

கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் எனப்படும் கே. பி. ஹரன் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் திருவையாறு என்னும் ஊரில் பிறந்தார். தனது 23வது வயது முதல் தமிழ்ப்பத்திரிகை உலகில் பல பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டு அனுபவங்களைப் பெற்றவர்.

 

ஊர்க்குருவி, ஐயாறன், கே.பி.எச் என்னும் புனைபெயர்களில் பல கட்டுரைகளை எழுதினார். ஈழத்தில் இவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் பெயர்பெற்றவை.

 

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.6

குற்றங்கடிதல்

2.1.6

Avoiding faults

435

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்.

varumunnark kAvAthAn vAzkkai erimunnar

vaiththURu pOlak kedum.

His joy who guards not 'gainst the coming evil day,

Like straw before the fire shall swift consume away.

பொருள்

Meaning

முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.

The prosperity of him, who does not timely guard against faults, will perish like straw before fire.

இன்றைய பழமொழி

Today's Proverb

யானைக்கும் அடி சறுக்கும்

yAnaikkum adi SaRukkum

Even elephants do slip.

 

Meaning

Even the mighty do slip.

இன்றைய சொல்

Today's Word

எடை பெ.

edai

பொருள்

Meaning

1.  தராசில் நிறுத்திக் கணக்கிடப்படும் அளவு (tharAsil n-iRuththik kaNakkitappadum aLavu)

2.  நிறையளவு (n-iRaiyaLavu)

3.  மிகுதல் (mikuthal)

4.  துயில் எழுப்புதல் (thuyil elupputhal)

1.  The measure of weight.

2.  Standard weight.

3.  Increasing, lengthening.

4.  rousing from sleep.

 

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India