Friday, July 8, 2011

Daily news letter 08-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

தினம் ஒரு குறள் செய்தி மடல் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்காக கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து வெளிவருகிறது ( visit http://atsnoida.blogspot.com for previous issues) . சில மாற்றங்கள், சில பகுதிகள் குறைப்பு, சேர்ப்பு ஆகியன அவ்வப்போது நடைபெறுகிறது.

திருக்குறள் 1000 மாவது குறளை நெருங்கும் இத்தருணத்தில், அடுத்து என்ன செய்வது, இந்த செய்தி மடலை மேலும் ஒரு பயனுள்ள மடலாக மாற்றுவது எப்படி என்பது பற்றி அறிய உங்கள் கருத்துக்களை வேண்டுகிறோம்.

உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் நீங்கள் பதிவு செய்யலாம். முதல் தினமான நேற்று 17 நபர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தார்கள்.

இம்மடலைப் படிக்கும் அனைவரையும், சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆனி ௨௩   (23) , வெள்ளிக் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- தமிழ் நூல் படிப்போம்  - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள்

ஹரிதாஸ் திரைப்படம் ஒரே திரையரங்கில் 110 வாரங்கள் தொடர்ச்சியாக ஓடி சாதனை படைத்தது; 1944 தீபாவளி அன்று வெளியான இப்படம் 1946 தீபாவளி வரை தொடர்ந்து திரையிடப்பட்டது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

மத்திய மந்திரி பதவியில் இருந்து தயாநிதி மாறன் ராஜினாமா  தினத் தந்தி 

விழாக்கோலம் காணும் பொன்னம்பல நாதன் தட்ஸ்தமிழ்

உத்தரப் பிரதேசம் தரகர்களால் ஆட்சி செய்யப்படுகிறது - ராகுல்  Bharath News

நியூசிலாந்து நாட்டில் 7.8 அளவுக்கு பூகம்பம் சுனாமி ... தினத் தந்தி

ஆகஸ்ட் 15 முதல் அரசு கேபிள் டிவி: கே.ராதாகிருஷ்ணன் தகவல்  தினமணி

19000 புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ் தினகரன்

சமச்சீர் கல்வி வழக்கு : ஐகோர்ட்டில் விசாரணை தொடங்கியது! தினகரன்

4-வது ஒரு நாள் போட்டி: இலங்கையை பந்தாடியது இங்கிலாந்து தினத் தந்தி

இரண்டே நாள்களில் 540 நில அபகரிப்பு வழக்குகள் பதிவு! Inneram.com

ஹர்பஜன் 400 விக்கெட்  தினமணி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

தமிழ் நூல் படிப்போம் 

Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext:

Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai, 1998-2010.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  

Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

ரா.பி. சேதுபிள்ளை  அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்)  20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....

6.   கடற்கரையிலே புனிதவதி (காரைக்கால் அம்மையார்)

தமிழ்நாட்டிலே காரைக்காலின் பெருமை யாரைக் கேட்டாலும் தெரியும். வாணிகத்தால் வளம் பெற்ற காரைக்கால், புனிதவதி பிறந்தமையால் புனித முற்றது. காரைக்கால் அம்மையார் என்னும் செம்மை சேர் நாமம் பெற்றவர் அவரே! அவ்வம்மையார் கருவிலே திருவுடையார்; கனிந்த திருவருளுடையார்; நாவிலே தமிழுடையார்; நற்றவத்தின் திறமுடையார்


அவர் சில காலம் இல்லறம் நடத்தினார். ஒரு நாள், அவரிடம் அமைந்திருந்த தெய்வத்தன்மையைக் கண்டான் அவர் கணவன்; துணுக்கம் கொண்டான். வணங்கத் தக்க தெய்வத்தை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு மனையறம் புரிய அவன் மனம் இசைய வில்லை. கடல் கடந்து வாணிகம் செய்து வருவதாகச் சொல்லிக் காரைத் துறைமுகத்தில் அவன் கப்பலேறினான். மாதங்கள் பல சென்றன. ஆண்டுகளும் சில கழிந்தன. கணவன் திரும்பி வரக் காணது கையற வெய்திய காரைக்கால் அம்மையார் ஒரு நாள் கடற்கரையிலே நின்று உள்ளம் உருகிப் பேசலுற்றார்:-

"
காரைப் பெருங்கடலே! நான் கண் பெற்ற கால முதல் நீ காட்சி தருகின்றாய். குழந்தைப் பருவத்தில் உன் தெள்ளிய மணலிலே தவழ்ந்து விளையாடினேன்; உன் அலைகளோடு உறவாடினேன்; இளங்காற்றை நுகர்ந்து இன்புற்றேன்; உன் துறைமுகத்தில் கப்பல் களைக் கண்டு களிப்புற்றேன். கரை காணாக் கருங் கடலே! ஆயினும், இப்பொழுது உன்னைக் கண்டு அஞ்சுகின்றது என் நெஞ்சம். ஆற்றாமையால் அலமருகின்றது என் உள்ளம். 'என் கணவர் - மாசற்ற மணாளர் - வாணிகம் செய்து வருவேன்' என்று சொல்லி உன் துறைமுகத்தில் வங்கமேறிச் சென்றார்; 'நெடுநிதி கொணர்வேன்' என்று நெடுங்கட லோடினார். ஆண்டு பல சென்றன. அவர் எங்குள்ளார் என்று அறியாது பாவியேன் ஏங்கித் தவிக்கின்றேன். 'அவர் ஏறிச் சென்ற கப்பல் என்னாயிற்றோ? இதுகாறும் அவர் வாராத காரணந்தான் யாதோ?' என்று எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏழை நெஞ்சம் புண்ணாகின்றதே!

"
நேச நெடுங்கடலே! என் கணவர் சென்ற வழிமேல் விழிவைத்து எத்தனை மாதமாகக் காத்திருக் கின்றேன்! வருகின்ற கப்பலை யெல்லாம் வாஞ்சை யோடு நோக்குகின்றேன். அந்தோ! ஒவ்வொரு நாளும் நான் படும் துயரத்தை யாரிடம் சொல்வேன்? கொண்ட கணவர்க்குத் தொண்டு செய்யும் உரிமை இழந்தேன்; தொல்லை வினையால் துயர் உழந்தேன்.


"
அருமை சான்ற ஆழியே! உன்னையே தஞ்சமாக அடைந்தேன். வஞ்சம் ஒன்றும் அறியாத என் கணவர் வாழுமிடத்தைக் காட்டாயா? அஞ்சேல் என்று அருள் செய்யமாட்டாயா? முந்நீர் கடந்து வரும் மெல்லிய காற்றே! நீயேனும் ஒரு மாற்றம் உரையாயோ? பன்னாள் உன்னொடு பழகினேனே! அப்பான்மையை மறக்கலாமா? நட்டாரைக் கை விடுதல் நன்றாகுமா? ஐயோ! ஓர் உயிர்க்கும் நான் தீங்கு நினைத்தறியேனே. எனக்கு ஏன் இந்த இடர் வந்தது?


"
அறவாழி அந்தணனே! நின்னை அறக்கடல் என்று ஆன்றோர் பாடினரே; அருட்கடல் என்று அறிந்தோர் போற்றினரே. இக் காரைக் கடலினும் பெரிதன்றோ நின் கருணைக் கடல்? கங்கு கரையின்றி எங்கும் நிறைந்த கருணையங் கடல் நீயே யன்றோ? மன்னுயிரை யெல்லாம் காத்தளிக்கும் அருங் கருணையால் அன்றோ அந்நாள் கடலினின்று எழுந்த பெரு நஞ்சை அள்ளி உண்டாய்? கண்டம் கறுத்தாய்; நீலகண்டன் என்ற பெயர் பெற்றாய். அண்டத்தை யெல்லாம் காக்கின்ற அருளின் அடையாளமன்றோ நின் கண்டத்தின் கருமை? அக் கருமையின் பெருமையை நினைத்து அடியேன் உருகுகின்றேனே!

"பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்

சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்-நிறம்திகழும்

மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்பது இடர்"


எம்பெருமானே! நான் அறிவறிந்த காலமுதல் நின்னை நினையாத நாள் உண்டோ? அன்பு மொழிகளால் வாழ்த்தாத நாள் உண்டோ? அடங்கிப் பணிந்து வணங்காத நாள் உண்டோ? என்றும் நின் திருவடியே சரணமெனக் கொண்டேன். எல்லாம் உன் செயலே என்றுணர்ந்தேன். இவ்வாறு வளர்ந்து வந்த என்னை நீயே இல்லறத்தில் உய்த்தாய்; நாகையில் உள்ள நல்லார் ஒருவருக்கு இல்லாளாய இருக்க வைத்தாய்; இல்லறத்தில் பொருத்திய நீயே பின்பு என் கணவரைப் பிரித்துவிட்டாயே! ஐயனே! இதுவும் உன் திருவிளையாட்டோ? அல்லும் பகலும் உன்னையே நினைந்துருகும் அடியார்க்கு இத் தகைய துன்பம் வரலாகுமோ? தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்க்கு மனக்கவலை இல்லை யென்பது மறைமொழி யன்றோ?


"
கண்ணுதற் பெருங் கடவுளே! காரைக் கருங் கடலைக் காலையும் மாலையும் நோக்கிக் கன்ணீர் வடிக் கின்றேனே! என் துயரைக் கண்டு உற்றார் எல்லாம் உருகுகின்றனரே! மனையறமும் மறுகுகின்றதே! செம்மேனி எம்மானே! என் மனக் கவலையை மாற்றல் உனக்கு அரிதோ? அடியாரது அல்லல் தீர்பது ஆண்டவன் கடன் அன்றோ? என் செயலாவது இனி யாதொன்றுமில்லை, ஈசனே!


"
காரைத் துறைமுகமே! இனி யான் உன் திருமுகத்தைப் பாரேன். பார்த்துப் பார்த்துப் பதங் குலைந்தது போதும். இறைமுகம் நோக்கிய எனக்கு உன் துறைமுகத்தில் இன்னும் என்ன வேலை? இன்றே என் பந்த பாசமெல்லாம் ஒழித்தேன்; மாயப் பிறப்பறுக்கும் மெய்ப் பொருளைச் சேர்ந்தேன்; என்றும் கடவுளை நம்பினோர் கைவிடப்படார்" என்று கட்டுரைத்துக் கடற்கரையை விட்டுக் காற்றினும் கடிது சென்றார் காரைக்கால் அம்மையார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3,20

கள்ளுண்ணாமை

(kaL  uNNAmai)

2.3.20

Avoiding Drunkkenness

Avoid drunkenness and addiction which benumb senses and lead to vileness, penury, shame and insanity

குறள் எண்  926

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

thunjinaar seththarin veRallar Eng-anrum

nanjunbaar kaLLuN bavar

Sleepers are as the dead, no otherwise they seem;
Who drink intoxicating draughts, they poison quaff, we deem.

பொருள்

Meaning

உறங்குபவர், இறந்துபோனவரிலும் வேறுபட்டவர் அல்லர்; அதுபோலவே, எப்போதும் போதைப் பொருளைப் பயன்படுத்துபவர் நஞ்சு உண்பவரிலும் வேறுபட்டவர் அல்லர்.

They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.

இன்றைய பொன்மொழி

உலகிலுள்ள சமயங்களில் அறத்தின் வழி நடப்பதே உண்மையான சமயம்.   

Member to Members

Posted on 5-7-2011 URGENT REQUIREMENT FOR THE FOLLOWING POSITIONS AT GR NOIDA /NOIDA (PH-II) FOR A WELL REPUTED ORGANIZATION DEALING WITH INDUSTRIAL AND DATACOM PRODUCTS: [TThanks to Mr.Hariharan - harih_1968@yahoo.com  for sending this info]

·         SALES MANAGER / SALES ENGINEER – BE (ELECTRONICS) WORK EXPERIENCE OF 3 – 5 YEARS PREFERABLY WITH POWER RELATED INDUSTRIES.  LOCATION GREATER NOIDA / NOIDA / GUJARAT (RESIDENT ENGINEER)

·         MARKETING SERVICES MANAGER  – BE / B.TECH (ELECTRONICS) WORK EXPERIENCE OF 3 – 5 YEARS PREFERABLY WITH POWER RELATED / INDUSTRIEAL PRODUCTS INDUSTRIES.

·         SUPPLY CHAIN HEAD / MANAGER – HAVE GOOD EXPOSURE IN PURCHASE, LOGISTICS, VENDOR MANAGEMENT.  IF ADDITIONAL QUALIFICATION IN MATERIAL MANAGEMENT, IT WILL BE ADDED ADVANTAGE – MINIMUM 7 YEARS EXPERIENCE IN SCM ESP IN PURCHASE FUNCTION IN INDUSTRIAL / DATACOM PRODUCTS MANUFACTURING INDUSTRY

·         PRODUCTION HEAD / MANAGER - HAVE GOOD EXPOSURE IN PRODUCTION AND ALLIED FUNCTIONS.  BE / B.TECH (ELECTRICAL, ELECTRONICS & COMMUNICATIONS) IF ADDITIONAL QUALIFICATION DIPMLOA / DEGREE IN OPERATIONAL MANAGEMENT, WILL BE ADDED ADVANTAGE – MINIMUM 10 YEARS EXPERIENCE IN MANUFACTURING OF INDUSTRIAL / DATACOM PRODUCTS / POWER SUPPLY MANUFACTURING INDUSTRY

·         DESIGN ENGINEER – BE / B.TECH / DIPLOMA (MECH) FOR THEIR PHASE-II NOIDA.   EXP : 2 – 6 YEARS

·         QUALITY ENGINEER – BE/B.TECH/DIP (MECH) WITH RELAVANT EXPERIENCE IN R&D / Q&A DEPT.  LOCATION: NOIDA (PH-II)

·         ITI (ALL TRADES) WITH 4 – 7 YEARS EXP. WITH ASSEMBLY KNOWLEDGE IN PRODUCTION LINE TO WORK AT PHASE-II NOIDA LOCATIONS.

COMPENSATION AND BENEFITS:  ATTRACTIVE BENEFITS BESIDES BEST SALARY PACKAGE IN THE INDUSTRY.  GOOD CAREER PROGRESSION AND BEST WORKING ENVIRONMENT.

ALL CANDIDATES (MANAGERS / ENGINEERS) SHOULD HAVE VERY FLAIR IN ENGLISH LANGUAGE.

Interested candidates please EMAIL your CV mentioning position and location and industry you are looking for on the SUBJECT.  Other details along with  your resume including your current package and contact details, etc. in strict confidence to: goldenjobsoffer@yahoo.in. 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enbling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: