Thursday, July 7, 2011

Daily news letter 07-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆனி ௨௨  (22) , வியாழன் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- தமிழ் நூல் படிப்போம்  - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள்

ஒரு நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் அறிக்கை வரவுச்செலவு சமநிலை எனப்படுகிறது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

ராகுல் கைது செய்யப்படுவார் - மாயாவதி அரசு எச்சரிக்கை Bharath News Online

நேதாஜியை அவமதிப்பதா? - அமிதாப் மீது வழக்கு! தட்ஸ்தமிழ்

சமச்சீர் கல்வி குழு அறிக்கை எதிர்பார்த்தபடி இருக்கிறது ... தினகரன் 

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும்: நிருபமா ராவ் தினமலர்

சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் மத்திய மந்திரி தயாநிதிமாறன் தினத் தந்தி

ஆஸ்திரேலிய அணியில் 20 ஓவர் போட்டி கேப்டன் ஒயிட் அதிரடி நீக்கம்  தினத் தந்தி

ஆந்திரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இல்லை: ப.சிதம்பரம் தினமணி

3வது டெஸ்ட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் தடுமாற்றம் தினகரன்

புதுவை கவர்னர் இக்பால் சிங் பதவி விலகும்படி மத்திய அரசு உத்தரவு நியூஇந்தியாநியூஸ்

சர்ச்சையில் சிக்கினார் சங்ககரா தினமணி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

தமிழ் நூல் படிப்போம் 

Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext:

Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai, 1998-2010.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  

Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

ரா.பி. சேதுபிள்ளை  அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்)  20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....

5 கடற்கரையிலே சாத்தனார்

சோழ நாட்டிலுள்ள காவிரிப்பூம்பட்டினம் முன்னொரு காலத்தில் உலகறிந்த பெரு நகரம். கண்ணகி யென்னும் வீரமா பத்தினியைத் தமிழ் நாட்டுக்குத் தந்த திருநகரம் அதுவே. அந் நகரின் அழகிய கடற் கடற்கரையை வந்தடைந்தார் மணிமேகலை ஆசிரியராகிய சாத்தனார். அலை அலையாகப் பல எண்ணங்கள் அவர் உள்ளத்தில் எழுந்தன. பெருங்கடலை நோக்கி அவர் பேசலுற்றார்:-


"
சோழ நாட்டுச் செழுங்கடலே! கங்கையினும் சிறந்த காவிரியாற்றின் நீரால் நீ நாளும் புனிதமடைகின்றாய். குடமலையிலே பிறந்து, கருநாட்டிலே தவழ்ந்து, தமிழ்த் திருநாட்டிலே நடந்து, உன்னை நோக்கி விரைந்து வரும் காவிரியைப் புகழாத கவி ஞரும் உளரோ? அந்த ஆற்று முகத்திலே வீற்றிருப் பது நின் அருமைத் திரு நகரம். இந்நகரின் அழகைக் கண்ணாற் பருகிக் களிப்புற்ற அறிஞர் +காவிரிப் பூம் பட்டினம் என்றும் பூம்புகார் நகரம் என்றும் அழைத்தார்களே!
-----------------------------------------
+
பூ-அழகு : பூம்பட்டினம்-The city beautiful

"
பாடல் பெற்ற பட்டினமே! உன் அழகுக்கு அழகு செய்தான் திருமாவளவன் என்னும் சோழ மன்னன். இந் நாட்டை யாண்ட ஆதியரசர்களில் தலை சிறந்தவன் அவனே; தமிழகத்திற்கு ஏற்றமும் தோற்றமும் அளித்த ஏந்தல் அவனே;ஈழ நாட் டைச் சோழ நாட்டோடு இணைத்த வீரன் அவனே."

இங்ஙனம் திக்கெலாம் புகழ் பெற்று விளங்கிய திருமாவளவன் உன் அருமையும் பெருமையும் அறிந்தான்; காவிரி நாட்டுக்கு நீயே உயிர் என்பதை உணர்ந்தான்; கண்ணினைக் காக்கின்ற இமைபோல் உன் நலத்தினைக் காக்க முற்பட்டான். மன்னவனே முன்னின்றால் முடியாத தொன்று உண்டோ? அன்று முதல் நீயே சோழ நாட்டின் தலைநகரம் ஆயினாய்! அளவிறந்த பொன்னும் பொருளும் செலவிட்டு உன்னைப் புதுக்கினான் அம்மாநில மன்னன். காவிரியின் வண்டல் படிந்து தூர்ந்திருந்த உன் துறைமுகத்தைத் திருத்தினான்; பெருக்கினான்; ஆழமாக்கினான். அதனால் + கயவாய் என்ற பெயர் இத் துறைமுகத்திற்கு அமைந்தது. தட்டுத் தடையின்றி எட்டுத் திசையினின்றும் வணிகர் இங்குக் குடியேறி வாழத் தலைப்பட்டார். வந்தவர்க்கெல்லாம் நீ வீடு தந்தாய். நிற வேற்றுமையையும் பிற வேற்றுமையையும் பாராது வஞ்சமற்ற மாந்தரை யெல்லாம் நீ வரவேற்றாய். சீனகரும் சோனகரும் உன் கயவாயின் அருகே மணிமாட மாளிகை கட்டி வாழ்வாராயினர். இவ் வழகிய கடற்கரையிலே தாழைவேலி சூழ்ந்த ஏழடுக்கு மாடங்கள் எத்தனை! கண்டோர் வியப்புற வானளாவி நிற்கும் பண்ட சாலைகள் எத்தனை!

+ "கயவாய் மருங்கில் காண்போர்த் தடுக்கும்

பயனறவு அறியா யவனர் இருக்கையும்"

 *சிலப்பதிகாரம் இந்திர விழவு எடுத்த காதை*


"
பூம்புகார்த் துறையே! அல்லும் பகலும் நின் அருமைத் துறைமுகத்தை நோக்கிக் கப்பல்கள் நீந்தி வரும் காட்சியைக் கண்டு கண் குளிர்ந்தேன். அந்த மாலை வந்தெய்து முன்னரே கடற்கரை யெங்கும் தீ நா விளக்குகள் திகழ்கின்றன. துறைமுகத்தின் அருகே ஓங்கி உயர்ந்த கலங்கரை விளக்கம் காட்சி தருகின்றது. 'கலங்கரை விளக்கம்' என்ற சொல்லின் அழகுதான் என்னே! 'கருங் கடலில் நீந்தி வரும் கப்பல்களை நெறிகாட்டி அழைக்கும் விளக்கு' என்ற அருமையான பொருளை யுடையதன்றோ அச்சொல்? 'தன்னை நோக்கித் தவழந்து வரும் குழந்தையை முகமலரந்து, கைநீட்டி அழைக்கும் தாய் போல, இருட்டிலே கருங் கடலில் மிதந்து வரும் கப்பல்களை ஒளிக் கரத்தால் வரவழைக்கும் விளக்கு' என்ற அழகிய கருத்தன்றோ அச் சொல்லில் அமைந்திருக் கின்றது? கடற்கரையில் உள்ள அவ் விளக்கைக் காண்பது கண்ணுக்கு இன்பம். அதன் பெயரைக் கேட்பது காதுக்கு இன்பம். இவ் விருவகை இன்பத்தையும் நுகர்ந்தன்றோ இளங்கோவடிகள் 'இலங்கு நீர் வரைப்பிற் கலங்கரை விளக்கம்' என்று உளங்குளிர்ந்து பாடினார்? அவர் ஆசைபற்றிப் பாடிய பாட்டின் ஓசை நயம் உணராத செவி என்ன செவியே?


"
வளமார்ந்த துறைமுகமே! இந்நானிலத்தில் உள்ள நானாவிதப் பொருள்களும் நீரின் வழியாகவும், நிலத்தின் வழியாகவும் உன் +அங்காடியில் வந்து நிறைகின்றனவே! வடமலையிற் பிறந்த பொன்னும் மணியும், குடமலையிற் பிறந்த ஆரமும் அகிலும், தென் கடல் முத்தும், குணகடற் பவளமும், சேரநாட்டு மிளகும், சோழநாட்டு நெல்லும், ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும் உன் அங்காடி யெங்கும் நிறைந் திருக்கின்றன. பசியும் பிணியும் பகையும் இன்றி, பண்பும் பயனும் உடையராய்க் குடிகள் வாழ்கின்றார் கள். இதுவன்றோ வாழ்வு?

------------------
+
அங்காடி= பசார்(Bazaar)

"தலைசிறந்த திரு நகரே! நீ அருளுடையாய்; பொருளுடையாய்; அழகுடையாய்; புலவர் பாடும் புகழுடையாய். நின் சீரும் சிறப்பும் பாடித் திருமா வளவன் கையாற் பரிசு பெற்றான் கடியலூர்க் கண்ணன். பட்டினப்பாலை என்னும் பெயரால் அவன் பாடிய பாட்டிலே செந்தமிழ்ச்சுவை சொட்டுகின்றது. தமிழ்த்தாய் உன்னை வாழ்த்துகின்றாள். அவளருளால் வாழும் அடியேனும் உன்னைப் போற்றுகின்றேன். கண்ணகியை ஈன்ற காவிரிப்பூம் பட்டினமே! வாழி; ஆற்று முகத்தில் வீற்றிருக்கும் அணி நகரே! வாழி; நாட்டையும் நகரையும் ஊட்டி வளர்க்கும் காவிரித் தாயே! வாழி வாழ்க; வாழ்க" என்று வாழ்த்திய வாயினராய்க் காவிரியைத் தொழுத கையினராய்க் கடற்கரையை விட்டகன்றார் சாத்தனார்

"பாடல்சால் சிறப்பின் பரதத் தோங்கிய
கோடாச் செங்கோல் சோழர்தம் குலக்கொடி
      +
மணிமேகலை: பதிகம்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3,20

கள்ளுண்ணாமை

(kaL  uNNAmai)

2.3.20

Avoiding Drunkkenness

Avoid drunkenness and addiction which benumb senses and lead to vileness, penury, shame and insanity

குறள் எண்  925

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

KaiyaRi yAAmai udaiththe porulkoduththu

meiyaRi yamai KoLal.

With gift of goods who self-oblivion buys,
Is ignorant of all that man should prize.

பொருள்

Meaning

விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).

இன்றைய பொன்மொழி

மனிதன் எப்படி இறந்தான் என்பதைவிட எப்படி வாழ்ந்தான் என்பதே சிறப்பு.  

Member to Members

Posted on 5-7-2011 URGENT REQUIREMENT FOR THE FOLLOWING POSITIONS AT GR NOIDA /NOIDA (PH-II) FOR A WELL REPUTED ORGANIZATION DEALING WITH INDUSTRIAL AND DATACOM PRODUCTS: [TThanks to Mr.Hariharan - harih_1968@yahoo.com  for sending this info]

·         SALES MANAGER / SALES ENGINEER – BE (ELECTRONICS) WORK EXPERIENCE OF 3 – 5 YEARS PREFERABLY WITH POWER RELATED INDUSTRIES.  LOCATION GREATER NOIDA / NOIDA / GUJARAT (RESIDENT ENGINEER)

·         MARKETING SERVICES MANAGER  – BE / B.TECH (ELECTRONICS) WORK EXPERIENCE OF 3 – 5 YEARS PREFERABLY WITH POWER RELATED / INDUSTRIEAL PRODUCTS INDUSTRIES.

·         SUPPLY CHAIN HEAD / MANAGER – HAVE GOOD EXPOSURE IN PURCHASE, LOGISTICS, VENDOR MANAGEMENT.  IF ADDITIONAL QUALIFICATION IN MATERIAL MANAGEMENT, IT WILL BE ADDED ADVANTAGE – MINIMUM 7 YEARS EXPERIENCE IN SCM ESP IN PURCHASE FUNCTION IN INDUSTRIAL / DATACOM PRODUCTS MANUFACTURING INDUSTRY

·         PRODUCTION HEAD / MANAGER - HAVE GOOD EXPOSURE IN PRODUCTION AND ALLIED FUNCTIONS.  BE / B.TECH (ELECTRICAL, ELECTRONICS & COMMUNICATIONS) IF ADDITIONAL QUALIFICATION DIPMLOA / DEGREE IN OPERATIONAL MANAGEMENT, WILL BE ADDED ADVANTAGE – MINIMUM 10 YEARS EXPERIENCE IN MANUFACTURING OF INDUSTRIAL / DATACOM PRODUCTS / POWER SUPPLY MANUFACTURING INDUSTRY

·         DESIGN ENGINEER – BE / B.TECH / DIPLOMA (MECH) FOR THEIR PHASE-II NOIDA.   EXP : 2 – 6 YEARS

·         QUALITY ENGINEER – BE/B.TECH/DIP (MECH) WITH RELAVANT EXPERIENCE IN R&D / Q&A DEPT.  LOCATION: NOIDA (PH-II)

·         ITI (ALL TRADES) WITH 4 – 7 YEARS EXP. WITH ASSEMBLY KNOWLEDGE IN PRODUCTION LINE TO WORK AT PHASE-II NOIDA LOCATIONS.

COMPENSATION AND BENEFITS:  ATTRACTIVE BENEFITS BESIDES BEST SALARY PACKAGE IN THE INDUSTRY.  GOOD CAREER PROGRESSION AND BEST WORKING ENVIRONMENT.

ALL CANDIDATES (MANAGERS / ENGINEERS) SHOULD HAVE VERY FLAIR IN ENGLISH LANGUAGE.

Interested candidates please EMAIL your CV mentioning position and location and industry you are looking for on the SUBJECT.  Other details along with  your resume including your current package and contact details, etc. in strict confidence to: goldenjobsoffer@yahoo.in. 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enbling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: