Thursday, May 24, 2012

24-05-2012 “Kuralum Porulum” from Avvai Tamil Sangam –ஆதித்தனார் நினைவு நாள்

24-05-2012 "Kuralum Porulum" from Avvai Tamil Sangam ஆதித்தனார் நினைவு நாள்

Is this email not displaying correctly? View it in your browser.

அவ்வை தமிழ்ச் சங்கம்

வைகாசி -௧௧ (11),வியாழன், திருவள்ளுவராண்டு 2043

http://www.avvaitamilsangam.org - avvaitamilsangam@gmail.comhttp://atsnoida.blogspot.com

Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_facebook.png - Friend on Facebook | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_twitter.png Follow on Twitter | Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: Description: http://gallery.mailchimp.com/653153ae841fd11de66ad181a/images/sfs_icon_forward.png Forward to a Friend

எதிரியை வேல்வதைவிட அவனை புரிந்து கொள்வதே மேல்.

குறளும் பொருளும் - 1177

காமத்துப்பால் – கற்பியல் – கண்விதுப்பழிதல்

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்

காணாது அமைவில கண்.

Translation:

Who loved me once, onloving now doth here remain;

Not seeing him, my eye no rest can gain.

பொருள்:

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

Explanation:

He is indeed here who loved me with his lips but not with his heart but mine eyes suffer from not seeing him.

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சிக்காலத்தில் இலவச மதிய உணவுத் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டப் பிறகு ஏழைக் குழந்தைகளின் பள்ளி வருகை நாட்கள் அதிகரித்தது.

போகும் இடம்- போகாத சுற்றுப்புறம்.

கடந்த வாரம் தினமணி புதுதில்லி பதிப்பில் ஹோஹோ (HOHO- Hop On Hop Off) பஸ் (http://www.hohodelhi.com/) பற்றி இப்பத்திரிகையின் நிருபரான திரு. வே.சுந்தரேஸ்வரன் அவர்கள் ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள். இந்த பேருந்தின் தனித்துவமிக்க வசதி மூலம் விடுமுறையில் சுற்றுலா வரும் பயணிகள் /உறவினர்கள் இந்தப் பேருந்தின் மூலம், குறிப்பிட்ட நேரத்தில் திரும்ப வேண்டும் எனும் விதியை மாற்றி நமக்குப் பிடித்த இடங்களை, நமக்கு தகுந்த நேரம் ஒதுக்கி ரசிக்க இந்த ஹோஹோ பஸ் உதவுகிறது என்று அவர் கூறியிருந்த கூற்று முற்றிலும் உண்மை. ஆனால், இந்த வசதியை எப்படி முழுதாக உபயோகப்படுத்துவது?

குறிப்பிட்ட பிரபலமான இடத்திற்குச் செல்லும் நாம் அதே இடத்தில் உள்ள மற்ற இடங்களை நேரமின்மை காரணமாகவோ, விவரமின்மை காரணமாகவோ ஒதுக்கி விடுகிறோம். சுற்றுலா என வந்த நாம் இவ்விடத்தின் முழு விவரங்களையும் அறியாமல் சில புகைப்படங்கள் எடுப்பது தான் குறிக்கோளாகக் கொண்டு வருகிறோம். பின்னர் அதைப் பற்றி அறியும்போது சிறிது வருத்தப்படுகிறோம்.

எங்கே என்ன உள்ளது. அதன் சிறப்பு என்ன எனும் தகவலைத் தரும் முயற்சியாக போகும் இடம்- போகாத சுற்றுப்புறம் எனும் தலைப்பில் உங்களுக்காக அவ்வை தமிழ்ச் சங்கத்தின் ஒரு புதிய முயற்சி.

போகும் இடம் குதுப்மினார் .

· செம்மணற்கல் / மினுக்கும் மணற்கல் போன்றவற்றினால் கட்டப்பட்ட உலகின் உயர்ந்த கோபுரம்.

· UNESCOவின் பாரம்பரியம் மிக்க கட்டடங்களில் ஒன்றாக கருதப்படுவது.

· 14.32m விட்டம் கீழ்[பகுதியிலும், 2.75m விட்டம் மேல் பகுதியிலும் கொண்ட ஒரு கூம்பு வடிவக் கட்டிடம்.

· 72.5m உயரமும், 379 படிக்கட்டுகளும் கொண்டது.

· தினசரி தொழுகை ஓதும் தேவைக்காக இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டது.

· அராபிக், மற்றும் நகரி எழுத்துக்களால் இக்கட்டிடத்தில் இதன் வரலாறு, திருக்குரானிலிருந்து பொறிக்கப்பட்டுள்ளது.

· குதுப்மினாரிலுள்ள இரும்புத்தூண் மிக பிரசித்தி வாய்ந்தது. இது சந்திர குப்தா விக்ரமாதித்யாவினால் கட்டப்பட்ட ஜைன மத ஆலயத்தின் ஒரு பகுதி. இங்கிருந்த 27 இந்து, ஜைன மதக் கோவில்கள் இடிக்கப்பட்டு இக் கோவில்களின் பொருள்கள் குதுப்மினார் கட்டிடத்தில் பயன்படுத்தப் பட்டன என்றும் வரலாறு உண்டு.இத்தூணைப் பின்பக்கமாக கைகளை வளைத்து முழு தூணையும் பிடிக்க முடிந்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. தற்போது இதற்கு அனுமதி இல்லை.

போகாத சுற்றுப்புறம்: இதனருகில் இருக்கும் மற்ற புகழ் பெற்ற இடங்கள் (நேரமின்மையால் / விவரமின்மையால் காணத் தவறுபவை)

Jahaz Mahal அக்காலத்தில், பிற இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஹசரத் காகி தர்கா, ஹசரத் நிசாமுதின் தர்கா ஆகியவற்றை தரிசிக்க புனித யாத்திரை வருவோர்க்காக கட்டப்பட்ட தங்கும் இடம். Jahaz என்றால் கப்பல் என்று பொருள், இக்கட்டிடத்தின் நிழல் இதன் அருகிலுள்ள நீர் தேக்கமான Hauz-I-Shamsi ல் படும்போது ஒரு கப்பல் போல தோற்றமளிப்பதால் இப் பெயர் காரணமானது.

Hauz-I-Shamsi ீர்த்தேக்கம் - சக்ரவர்த்தி சம்சுதீன் அல்டுமிஷ் (Shams-ud-din Iltutmish) அவர்களில் கனவில் வந்த முஹம்மது (ஸல்) ஒரு குறிப்பிட்ட இடத்தை காட்டி அங்கு ஒரு நீர் தேக்கம் நிறுவ சொன்னாதகவும், மறுநாள் அல்டுமிஷ் அவ்விடத்திற்கு சென்றபோது அங்கு முஹம்மது (ஸல்) அவர்கள் வந்த குதிரை குளம்பின் பாத அச்சு தெரிந்ததாகவும், பின்னர் அக்குளம்பின் அச்சைச் சுற்றி ஒரு காட்சி மாடமும், அம் மாடத்தைச் சுற்றி நீர் தேக்கமும் அமைத்ததாக ஒரு வரலாறு உண்டு. இன்றும் ஸல் அவர்களின் குதிரையின் குளம்பின் பாத அச்சின் பிரதி ஒன்றைக் காணலாம். முன்னர் நீர்த்தேக்கத்தின் நடுவிலிருந்த இந்த மாடம் இன்று ஆக்கிரமிப்பு, தூர் இவற்றின் காரணமாக நீர்த்தேக்கத்தின் கிழக்கு மூலையில் அமைந்துள்ளது.

இன்னொரு வரலாறு: இஸ்லாமிய சுஃபி முனி க்வாஜா ஹசரத் குத்புதீன் பாக்தியார் காகி (Hazrat Qutbuddin Bakhtiar Kaki) அவர்களின் கனவிலும் முஹம்மது ( ஸல்) தோன்றி இவ்விடத்தை காட்டி இங்கு நீர்த் தேக்கம் அமைக்க சொன்னதானவும், நீர் தட்டுப்பாடு கொண்ட அந்த வேளையில், இங்கு தோண்டும்போது இயற்கை நீருற்று வெளிவந்து நீர் தட்டுப்பாட்டை குறைத்தாகவும் ஒரு வரலாறு உண்டு. இது ஒரு மழை நீர் சேமிப்புத் தேக்கம்.

Madhi Masjid குதுப்மினருக்கு அருகில் உள்ள சுற்றுலா வரும் பலர் அறியாத ஒரு மசூதி. இக்கட்டிடத்தின் அமைப்பு கொண்ட பல சிறு கோபுரங்கள், இது ஒரு மசூதி மட்டுமன்றி, எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் ஒரு கோபுரமாகவும் இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.

Rajon Ki Baoli ( ாஜோன் கி பவ்லி) - ஒரு பிரமிக்க வைக்கும் படிக்கிணறு., இது ஆதாம் கான் சமாதி அருகே உள்ளது. தரையிலிருந்து கீழே மூன்று மாடிகளை கொண்ட நீர்த்தேக்கம். வெளியிலிருந்து பார்க்கும்போது மேல் நிலை மட்டும் தெரிய, அருகில் செல்லச் செல்ல கீழே உள்ள நிலைகள் தெரிகிறது. நீரின் அளவைப் பொறுத்து கீழே சென்று தண்ணீர் எடுக்க வசதியாகக் கட்டப்பட்ட படிக்கிணறு. இன்று நீரின்றி காய்ந்து இருந்தாலும் இதன் அமைப்பை பார்த்துப் பிரமிக்க வேண்டிய ஒரு இடம்.

Gandhak ki Baoli இதுவும் ஒரு படிக்கிணறு. குதுப்மினாரின் அருகேயுள்ள மெஹ்ரோலி எனும் ஊரில் தபால் நிலையத்திற்கு அருகே உள்ளது.

Tomb of Adham Khan- அக்பர் சக்ரவர்த்தியால் தேசத் துரோகி என அறிவிக்கப்பட்டு ஆக்ரா கோட்டையின் உச்சியிலிருந்து இருமுறை தூக்கி வீசப்பட்டு மரணமடைத்த ஆதாம்கானின் சமாதி. இதன் எட்டு முகவடிவமும், ஒவ்வொருமுகத்திலும் மூன்று வாயில்கள் கொண்ட அமைப்பு, அகலமான சுவர்கள் இக்கட்டிடம் ஒரு சிக்கலான வழி போல் அமைந்துள்ளது இதன் சிறப்பு.

Zafar Mahal- ஜஃபர் மஹால் முகலாய அரசின் கடைசி மன்னரான பகதூர் ஷா ஜஃபர் அவர்களின் தந்தை அக்பர் ஷா -2 அவர்கள் கோடை வாஸஸ்தலமாக கட்டிய ஒர ாளிகை. இங்குள்ள ஹாத்தி கேட் ஒரு அம்பாரியுடன் அலங்கரிக்கப்பட்ட யானை நுழையுமளவு 50 அடி அகல வாயிலைக் கொண்டது. இதன் வாயிலில் மூன்று ஜன்னல்களும் பின்னர் பன்னிரண்டு ஜன்னல்களும் கொண்ட கட்டிட அமைப்பு காற்று நன்கு உள்ளே வீசும் வகையில் அமைக்கப்பட்டது.

Jain Mandir Dada Bari பொதுவாக குதுப்மினார் செல்லும் பயணிகள் அதிகன் பேருக்கு தெரியாத பகுதி. பல டெல்லி வாசிகளே பார்த்திராத ஆனால் பார்க்கவேண்டிய ஓரிடம். இங்கு 13ம் நூற்றாண்டில் வாழ்த்த மனிதரி தாதா ஸ்ரீ ஜிஞ்சந்திரசூரி என்ற ஜைன முனியின் சமாதி உள்ளது. 6 வயதில் தீக்ஷை எடுத்த இவர் 9 வயதில் குருவாகி, இந்தியாவில் ஜைன மதத்தை வளர்க்க பாதயாத்தியரை மேற்கொண்டார். இவரது குரு, இவரை பாதயாத்திரையின் போது அப்போதைய டெல்லிக்குள் பிரவேசிக்க வேண்டாமென்றும் அங்கு அவர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் கூறியிருந்தார். ஆனால் டில்லியின் அன்றைய ராஜாவான மதன்பாலின் வேண்டுகோளை மறுக்கமுடியாமல் உள்ளே வந்த இவர் இங்கே தங்கினார். பின்னர் பரஸ்வநாத் கோவிலை அன்றைய டில்லியில் அமைத்தார். (அக்கோவிலை அழித்துத்தான் பின்னர் குதுப்மினார் அவ்விடத்தில் கட்டப்பட்டது). அவரது 26ம் வயதில் உலகை துறந்த அவர், தன் சிஷ்யர்களிடம் தன் உடலை தூக்கியபின் ஒருமுறை கீழே வைத்துவிட்டால் பின் மறுமுறை தூக்க முடியாத அளவு கனமாகிவிடும் பின்னர் உடலைத் தூக்குவது கடினம் என்று இறக்குமுன்பே எச்சரித்தார் மறைவுக்குப் பின் அவர் உடல் யோகினிபுரத்தின்( அன்றைய டில்லி) வழியாக வரும்போது பக்தர்கள் கடைசி மரியாதையை செலுத்தும் வண்ணம் ஓரிடத்தில் இறக்கி வைக்கப்பட்டது. பின்னர் அவ்வுடலை அங்கிருந்து நகர்த்த முடியவில்லை. பலசாலிகளும், யானைகளும் முயன்றும் அவ்வுடலை நகர்த்த முடியவில்லை, எனவே அதே இடத்தில் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டது.  இந்த Jain Mandir Dada Bari கோவிலில் இந்த சாமாதி உள்ளது. சலவைக்கல், வெள்ளி கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த கோவிலில் தாதா குரு அவர்களின் வாழ்க்கை பற்றிய வரை படங்களும், பல ஜைன முனிகள் பற்றிய reverse glass painting முறையில் வரையப்பட்ட படங்களும், கண்ணாடியிலே ஆன மேற் கூரையும் சிறப்பு. பார்க்கவேண்டிய இடம்.

Yogmaya Temple – யோக்மாயா கோவில். இக்கோவிலின் பெயர் காரணமாக யோகினிபுரம் என்றழைக்கப்பட்ட இவ்விடத்தில் பாண்டவர்களால் மகாபாரத போருக்குப் பின் கட்டப்பட்டதாக கருதப்படும் கோவில் . தில்லியின் 7 புராதான நகரங்களில் ஒன்றான மெஹ்ரோலி ( அன்றைய யோகினிபுரம்) எனும் இடத்தில் இக்கோவில் உள்ளது. இங்குதான் குதுப்மினாரும் உள்ளது. கிருஷ்ணர் பிறந்து இடம் மாறிய பின் , கம்சன் ஒரு பெண்குழந்தையை தேவகியின் குழத்தை என வதம் செய்யப் போக அக் குழந்தை கம்சனின் அழிவு பற்றி அசரீரியாகக் கூறி மறைந்ததாக கேட்டிருக்கிறோமே, அந்த குழந்தையான கிருஷ்ணரின் தங்கையான யோகமாயாவின் திருக் கோவில் இது. மிகவும் புராதனக் கோவில். பார்க்க வேண்டிய இடம்.

மேஹரொலி யின் புராதனக் கடைத்தெரு ( குறைந்த அகலத்தில் நீளமான கடைத் தெரு) பார்க்கவேண்டிய ஓரிடம். கைவேலைப்பாடு செய்த புகைக்குழாய் (smoking pipe), காப்பர் பாத்திரங்கள், மரத்தால் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள், கறிமசால் பொருள்கள் வாங்கச் சிறந்த இடம்.

இவ்விடங்களை அங்குள்ள உள்ளூர் போக்குவரத்து வகைகளைக் கொண்டு பார்க்கமுடியும். குதுப்மினாரிலிருந்து மெஹ்ரோலி பஸ்ஸில் செல்லமுடியும். இதற்கிடையில் ஒரு பேருந்து நிறுத்தம் தான். கொஞ்சம் நடக்க முயன்றால் அனைத்து இடங்களும் பார்க்க முடியும். அடுத்தமுறை குதுப் மினார் செல்லும் போது சிறிது நேரமெடுத்து இவ்விடங்களைப் பாருங்கள். இதில் சில இடங்கள் சுற்றுலா பயணிகள் அதிகம் வராததால் கவனிப்பாரன்றி இருக்கிறது. சுற்றுலா பயணிகள் வராததிற்கு இவ்விடங்கள் பற்றிய விவரமின்மையும் ஒரு காரணம். சில இடங்கள் இடப் பற்றாக்குறை காரணமாக அடைசலாக இருப்பது போல் தோன்றும். பொறுத்துக் கொண்டால் சில புதிய இடங்களைப் பார்த்த சந்தோஷம் நிச்சயம் வரும்.

உங்கள் கருத்துக்கள் எங்களை வலுவாக்கும். கருத்துக்களை avvaitamilsangam@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு எழுதவும்.

நம்மைச் சுற்றி...

Date & Time

Venue

Program

Organized By

Contact Nos.

4/6/2012

5.00 AM to 5.45 AM

Sri Ram Mandir, HAF Pocket 2, Sri Ram Mandir Marg, Sector 7, Dwarka, New Delhi - 110075

Kumbhabhishekam Of Sri Ram Mandir to be performed by Pujyasri Jagadguru Jayendra Saraswati Swamigal Of Kanchi Kamakotee Peetam

The Delhi Bhajana Samaj Sri Ram Mandir Trust,

Shri S Ramaswamy, (Ph: 99680 93927),

Sh S Ganesan : 9810138189

Sh N Loganathan : 9868809429

Sh R Krishna Kumar : 9868826051

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com

No comments: