குறளும் பொருளும் - 1161 காமத்துப்பால் – கற்பியல் – படர்மெலிந்திரங்கல் மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். Translation: I would my pain conceal, but see! it surging swells, As streams to those that draw from ever-springing wells. பொருள்: இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது. Explanation: I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it. உங்களுக்குத் தெரியுமா? கர்நாடக சோமநாதபுரத்திலுள்ள சிவசமுத்திரம் அருவி இந்தியாவின் இரண்டாவது பெரிய அருவியும் உலகின் பதினாறாவது பெரிய அருவியும் ஆகும். "நல்லா இருப்பே" - அன்று வகுத்த வழிமுறையும் அறி(வு)வியல் தான்... பச்சை... கற்காலம் முதல் இன்று வரை உணவுப் பழக்கம் பல மாறுதல்களுக்கு உட்பட்டுள்ளது என்றாலும் ஆரோக்கியம் எனும் பேச்சு வரும்போது அன்றும் இன்றும் சிறிதே மாறியுள்ளது. கற்காலத்தில் உணவுகள் சமைக்கப்படவில்லை காரணம் நெருப்பு பற்றி தெரியாமல் இருக்கலாம் கிடைத்ததை பச்சையாக உண்டு வாழ்ந்தான் மனிதன். இன்று கட்டாயத்தின் காரணமாகவும் நமது உடல் படுத்தும் பாட்டினாலும் பச்சையாக உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் அதிலும் சில தவறுகள் இருந்தன, எனவே அடுத்த கட்டத்தில் , எவற்றை சமைப்பது, எவற்றை பச்சையாக உண்பது என்பது பிரிக்கப்பட்டது. இந்த முன்னேற்றமும் ஆரோகியமாகதான் இருந்தது. மரக்கறி, இறைச்சி, கனிகள், கீரைகள் இவை முக்கிய உணவு அன்றும் இன்றும். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ நாம் செய்யும் சில தவறுகள் உணவின் சத்தை இழக்கிறது. மரக்கறியும் , இறைச்சியும் சம பகுதிகளாக உண்ணப்பட்டன. இன்றும் மேலை நாடுகளில் இறைச்சி தினமும் உண்ணப்பட்டாலும், காய், கீரை வகைகளும் அத்துடன் சேர்த்து உண்ணப்படுகிறது. அன்றைய மனிதன் மீன், கீரை இவைகளை அதிகம் உண்டான். இவைகளில் Omega-3 அதிகம் உள்ளது. கடலோரம் உள்ளவர்கள் மீனை முக்கிய உணவாகவும், நிலப்பகுதியில் உள்ளவர்கள் காய்கறிகளில் உள்ள Omega-3 யை நம்பியும் இருந்தனர். மரக்கறி வகைகளில் முள்ளங்கி, காலி பிளவர், கீரை வகைகளில் இவை அதிகம் உள்ளது. பஞ்சாப் பகுதியில் முள்ளங்கியை அப்படியே சாப்பிடுவதும், கடுகுக் கீரை முக்கிய உணவாக இருப்பதும் இதனால் கூட இருக்கலாம். இறைச்சியும் கூட இலை, தழைகளை உண்டு வாழ்ந்த விலங்குகளை மட்டுமே வேட்டையாடி உண்டான். அவை இயற்கையாக விளைந்த இலை, தழைகளை உண்டு வாழ்ந்தவை. எனவே தேவையான Omega-3 கிடைத்தது. இதைப் படித்ததும் சல்மான் கான் போல இன்று வேட்டையாட முயலாதீர்கள்... வேறெங்கு இந்த சக்தி சுலபமாக கிடக்கும் எனப் பாருங்கள். நமது உணவுகளில் இன்று Omega-6 அதிகம் உள்ளது. இது அதிகம் உள்ள பொருள்கள் Sunflower seeds, seed oils, corn, pumpkin seeds, sesame seeds, nuts, meat, dairy products.போன்றவை. Omega-3 ல் இதயத்தின் பாதுகாப்பு, அழற்சி நீக்கல் சக்திகள் உள்ளன. Omega-6 ல் இரத்தக் கொழுப்பை குறைத்தல், தோலுக்கு தேவையான சக்தி போன்றவை உள்ளன. Omega-6, Omega-3 இவற்றின் விகிதம் 2:1 நல்லது என வல்லுனர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஐரோப்பிய உணவுகளில் இது 8:1 எனவும், அமெரிக்க உணவுகளில் இது 10:1 எனவும் ஆஸ்திரேலியா உணவுகளில் இது 12:1 ஆகவும் இன்றைய இந்திய உணவுகளில் இது 20:1 எனவும் இருக்கிறது என தெரிய வந்துள்ளது. சர்க்கரை வியாதி அதிகம் உள்ள நாடு இந்தியா என நாம் பெருமைப் பட்டுக்கொள்ளும் விஷயம் ஏன் எனப் புரிகிறதா? கற்கால மனிதனின் உணவுகளில் இந்த விகிதம் 0.79:1 ஆகா இருந்தது. உருளைக்கிழங்கு இல்லை, எண்ணைகள் இல்லை, பிரச்சனையும் இல்லை. இது நாம் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டிய சமயம். உங்கள் உணவு முறையை அலசுங்கள், இன்டர்நெட் ல் தேடி அதன் சக்திகளை கணக்கிடுங்கள். மாற்றம் தேவை எனில் மாற முயலுங்கள். சில நல்லவைகள்: · அதிகம் கீரைகளையும், பச்சை நிறம் நிறைந்த உணவுகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். · பச்சையாக சாப்பிடப் பழகுங்கள் · முடிந்தவரை காய்கறிகளின் தோலை அகற்றாமல் உண்ணப் பழகுங்கள், · மீன் , இறைச்சியைவிட நல்லது, ஆனால் இதை எண்ணையில் பொரித்தோ, நன்கு வருத்தோ உண்ண மீண்டும் சக்தியை இழக்கிறோம். · மீன் எண்ணெய், cod-level oil போன்றவை நல்லது. முடிந்தால் அதை மருந்து போன்று உண்ணப் பழகவும். · கூட்டு வகைகள் அதிகம் உண்பது காய்கறிகள் தனது சக்தியை இழக்காமல் நமக்கு சேர உதவும். தெரிந்தோ தெரியாமலோ அன்றைய மனிதன் சுகமாக இருந்தான்,ஏனெனில் அவன் உயிர் வாழ உணவு உண்டான் எனவே சுவை பற்றி கவலைப் படவில்லை. இன்று நாம் சுவைக்காக சக்திகளை துறக்கத் துணிகிறோம். பிறகு மருத்துவர் உணவில் கட்டுப்பாடு செய்யும் போது தவிக்கிறோம். நாமே கட்டுப்பாட்டிலிருந்து விலகும்போது நம் வாரிசுகளுக்கு எப்படி நல்லதை கற்றுக் கொடுக்க முடியும். நூலைப் போலத்தானே சேலை... இப்பகுதியில் இதுவரை வெளிவந்த கட்டுரைகளை http://atsnoida.blogspot.com எனும் தளத்தில் காணலாம். NEW CARNATIC MUSIC TEACHER IN NOIDA Smt. Vasantha Krishnan a carnatic vocalist with a teaching experience of over 15 years has recently shifted to NOIDA. Anyone who wants to learn carnatic music can contact her for further details. Her contact details are: Smt. Vasantha Krishnan, 205, Alpine-C, Grand Omaxe, Sector 93, NOIDA Phone No: 9958280308. Email id: vasantha.krishnan81@gmail.com நம்மைச் சுற்றி... Date & Time | Venue | Program | Organized By | Contact Nos. | 28-4-2012 Saturday 5 - 9 PM | Delhi Tamil Sangam | Chithrai Isai Vizhaa Prog 1- Violin by Kumari. Anusha Shreedhar Prog 2: Carnatic and Hindusthani Jugalbandi by Anuradha Sriram & Sriram Parasuram & party. | Dwarakalaya | G.Jaishankar 9810116465, S.Santhakumar 9818084125 | 29-4-2012 Sunday 5 - 9 PM | Delhi Tamil Sangam | Chithrai Isai Vizhaa Prog 1- Nadiminti Sisters Sravanthi & Sarvani - Vocal Prog 2: Unique All women group "STHREE THAAL THARANG" – LAYA RAGA SAMARPPANAM by Smt. Sukanya Ramagopal & party | Dwarakalaya | G.Jaishankar 9810116465, S.Santhakumar 9818084125 | | | | | | | Advisors around us · For any type of help like knowledge of insurance, getting the right policy, please contact N.K.IYER, C-55, Sector 19,Noida, Mobile No is 9873711601, nkiyerc55@gmail.com · For Vastu Consultancy and services contact K. RANGANATHAN, Vasundhara Enclave, Delhi - 110 096.Tel: 011-22618082 M # 8130164956. · HEB HOROSCOPE EXCHANGE BUREAU, 180-B, Pocket B Mayur Vihar - Phase II Delhi 110091,Phone: 011-22779432(MTNL,011-43595851(Airtel) 0 8800532767 (Airtel)E.Mail : srinivasantt@yahoo.com Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing. This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe send an email to avvaitamilsangam@gmail.com |
No comments:
Post a Comment