Saturday, May 14, 2011

Daily news letter 14-5-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கவிருக்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்.

முதன் முறையாக பிரதான எதிர்க்கட்சியாக அமையவிருக்கும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்திற்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

தமிழ்நாடு மேலும் பன்மடங்கு உயரவும், தமிழ் மொழி, கலை, கலாச்சாரம்  ஆகியவை மேலும் சிறந்த முறையில் பாதுகாக்கப்படவும் தேவையான முயற்சிகளை ஒன்றுசேர்ந்து எடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

சித்திரை ௩௧ (31) , சனிக்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- வரலாற்றில் இன்று - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி

தெரிந்து கொள்ளுங்கள்

ஓர் ஆந்தை தனது தலையை இரு புறமும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

நான்கு மாநில முதல்வர்கள் ராஜினாமா தினமலர் 

முதலிடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெப்துனியா

 ஜெயலலிதாவுக்கு பிரதமர் டெலிபோனில் வாழ்த்து தினத் தந்தி

ஒசாமா பின்லேடன் கொலையில் சர்வதேச விதிகள் மீறல்  தினகரன்

கருணாநிதி 12வது முறையாக வெற்றி தினமலர் 

பெட்ரோல் விலை, நாளை உயருகிறது தினத் தந்தி

கடப்பா இடைத் தேர்தல் ஜெகன் அமோக வெற்றி தினகரன்

ராஜஸ்தான் கேப்டன்: வாட்சன் விருப்பம் தினமணி

பிரதான எதிர்க்கட்சியாகிறது தேமுதிக தினமணி

நான் நினைத்தது போல அதிமுக வென்றது மிக மிக மகிழ்ச்சி-நடிகர் விஜய்  தட்ஸ்தமிழ்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று ( Today in History)

நிகழ்வுகள்

1264 - இங்கிலாந்தின் இங்கிலாந்தின் மூன்றாம் ஹென்றி பிரான்சில் கைது செய்யப்பட்டான்.

1610 - பிரான்சின் நான்காம் ஹென்றி மன்னன் கொலை செய்யப்பட்டான். பதின்மூன்றாம் லூயி முடி சூடினான்.

1643 - பதின்மூன்றாம் லூயி இறக்க, அவனது 4-வயது மகன் பதினான்காம் லூயி இரான்சின் மன்னனானான்.

1796 - பெரியம்மை நோய்க்கான தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் அறிமுகப்படுத்தினார்.

1811 - பராகுவாய் ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.

1861 - ஸ்பெயினில் பார்சிலோனாவில் 859-கிராம் எடையுள்ள விண்கல் ஒன்று வீழ்ந்தது.

1879 - 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தனர்.

1900 - கோடைக் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பாரிசில் ஆரம்பமாயின.

1939 - பெருவைச் சேர்ந்த 5 வயது நிரம்பிய லீனா மெடினா உலகின் முதலாவது வயதில் குறைந்த தாயாக அறிவிக்கப்பட்டார்.

1940 - இரண்டாம் உலகப் போர்: நெதர்லாந்து ஜெர்மனியிடம் சரணடைந்தது.

1948 - இஸ்ரவேல் நாடு தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இஸ்ரேலைத் தாக்கத் தொடங்கின.

1955 - பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு நாடுகள் சேர்ந்து வார்சா ஒப்பந்தம் எனப்படும் தற்காப்பு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டன.

1965 - இலங்கையில் ரோகண வீஜயவீர மக்கள் விடுதலை முன்னணி என்னும் அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.

1973 - ஸ்கைலாப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் சட்டர்ன் 5 விண்கப்பலில் விண்ணுக்கு ஏவப்பட்டது.

1976 - யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழீழப் பிரகடனத்தை வெளியிட்டனர்.

2004 - டென்மார்க்கின் முடிக்குரிய இளவரசர் பிரெட்ரிக், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த "மேரி டொனால்ட்சன்" என்னும் பெண்ணை திருமணம் புரிந்தார்.

பிறப்புக்கள்

1907 - அயுப் கான், பாகிஸ்தான் அதிபர் (இ. 1974)

1944 - ஜோர்ச் லூகாஸ், திரைப்பட இயக்குனர்

1948 - பொப் வூல்மர், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் துடுப்பாட்ட அணியின் பயிற்றுநர் (இ. 2007)

1953 - நொரொடாம் சிகாமணி, கம்போடியாவின் மன்னர்

இறப்புகள்

1574 - குரு அமர் தாஸ், மூன்றாவது சீக்கிய குரு (பி. 1479)

1837 - ஆ. குமாரசாமிப்பிள்ளை (பி. 1784)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

 

2.3.15

பகைத்திறம் தெரிதல் (Pagaiththiram therithal)

 

2.3.15

 

Appraising enemy's skills

Better than knowing, endeavour to overcome and befriend, build safeguards, but not hesitate to destroy defying foes

குறள் எண்  879

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

ilaithAga munmaram kOlga kaLainar

kaikollum kAzhththa idaththu.

Destroy the thorn, while tender point can work thee no offence;
Matured by time, 'twill pierce the hand that plucks it thence.

பொருள்

Meaning

நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.

A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.

இன்றைய பொன்மொழி

நண்பனுக்காக உயிரைக்கொடுப்பது என்பது எளிது ஆனால் உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது அரிது.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: