Saturday, October 31, 2009

Daily news letter 31-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் – 31, ஐப்பசி – 14, ஜில்ஹாயிதா – 12

 

Kindly visit our website at http://avvaitamilsangam.googlepages.com and give your comments and suggestions.

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

Today in History

1924 – உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.

1931 - தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.

1984 - இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 2000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1875 - வல்லபாய் பட்டேல், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1950)

1930 - மைக்கேல் கொலின்ஸ், அமெரிக்க விண்வெளிவீரர்

1933 - துரை இராஜாராம், தமிழக எழுத்தாளர்

இறப்புகள்

1975 - எஸ். டி. பர்மன், இந்திய இசையமைப்பாளர் (பி. 1906)

1984 - இந்திரா காந்தி, இந்தியப் பிரதம மந்திரி (பி. 1917).

1986 - ரொபேர்ட் மலிக்கென், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர் (பி. 1896)

2003 - செம்மாங்குடி சிறிநிவாச ஐயர், இந்திய கர்நாடக இசைப் பாடகர், (பி. 1908).

2005 - பி. லீலா, பின்னணிப் பாடகி

இன்றைய சிறப்பு மனிதர்கள்:

 

இந்திரா காந்தி (ஜனவரி 24, 1966 – மார்ச் 24, 1977) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

 

இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார்.

மேலும் படிக்க: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF

சர்தார் வல்லப்பாய் படேல் (அக்டோபர் 31 1875 – டிசம்பர் 15 1950) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து பிரித்தானியர்களுக்கு எதிர் அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரஸில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

 

துரை இராஜாராம் (பிறப்பு: அக்டோபர் 31, 1933) பி. ஏ. துரைசாமிப்பிள்ளையின் மகனாக பிறந்தவர். மயிலம் தமிழ்க்கல்லூரியில் வித்துவான் தேர்வில் முதல் வகுப்பில் வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பல வைணவ மாநாடுகளில் கலந்துகொண்ட இவர் 1994 ஆம் ஆண்டு பண்ருட்டி வைணவ மாநாட்டிற்கு இவர் தலைமை தாங்கியது குறிப்பிடத்தக்கது.

இவர் இயற்றிய வ. உ. சிதம்பரனார், விண்ணுலகில் பாரதியார் என்னும் நாடகங்களை சென்னை வானொலி ஒலிபரப்பியுள்ளது. கம்பராமாயணம், பதினெண் கீழ்க்கணக்கு, ஸ்ரீவசன பூஷணம், கம்பனின் சிற்றிலக்கியங்கள், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், மூவருலா, மஸ்தான் சாகிபு பாடல்கள் மற்றும் பல நூல்களுக்கு தெளிவுரை எழுதியுள்ளார்.

கலிஃபோர்னியாவில் உள்ள உலகக் கலை பண்பாட்டு இயக்கம் இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

 

சீனிவாச ஐயர் (பிறப்பு: ஜூலை-25, 1908 இறப்பு: 2003 ), கர்நாடக இசையுலகின் பீஷ்ம பிதாமகனாகக்கருதப்பட்டவர். தஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடி அருகே திருக்கொடிக்காவல் கிராமத்தில்மிகப் பிரபலமான இசைக் குடும்பத்தில் பிறந்தவர்.

1948ம் ஆண்டில் மியூசிக் ஆகாடெமியின் சங்கீத கலாநிதி பட்டத்தைப் பெற்றார். இளம் வயதில் அந்தப் பட்டம்பெற்ற முதல் நபர். மத்திய அரசின் பத்மபூஷன் உள்பட நாட்டின் மிக உயரிய இசைவிருதுகளைப் பெற்றவர்.

மறைந்த திருவாங்கூர் மகாராஜா சுவாதித் திருநாள் எழுதிய கீர்த்தனைகளுக்கு இசை வடிவம் தந்தவர். திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான கலைஞராக இருந்தவர். திருப்பதி கோவிலின் ஆஸ்தான கலைஞராகவும் இருந்தவர். சங்கீத கலாபூஷன் உள்ளிட்ட பல்வேறுவிருதுகளைப் பெற்றுள்ளார்.

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.7

பெரியாரைத் துணைக்கோடல்

2.1.7

Gaining Great men's help

450

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே

நல்லார் தொடர்கை விடல்.

pallAr pakaikoLaliR paththaduththa thee maiththae

na-llAr thodarkai vidal.

Than hate of many foes incurred, works greater woe

Ten-fold, of worthy men the friendship to forego.

பொருள்

Meaning

நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்.

It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.

இன்றைய பொன்மொழி

மனதிற்கு மனமே சாட்சி. மற்றதற்குத் தெய்வமே சாட்சி.

இன்றைய சொல்

Today's Word

எண்ணீர்  பெ.

eNNEr

பொருள்

Meaning

1.  (எள் + நீர்) இறந்தோர்க்கு இடும் படையல், திலோதகம்.

iRan-thorkku idum padaiyal, thilOthakam

1.  Water with sesame seeds offered to the dead as libation.

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: