Thursday, October 15, 2009

Daily news letter 15-10-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

.

அவ்வை தமிழ்ச் சங்கம்

Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315

Web: http://avaitamilsangam.googlepages.com Email: avvaitamilsangam@gmail.com

அக்டோபர் - 15, புரட்டாசி - 29, ஷவ்வால் – 25

இன்று: இந்தியாவில் பதவி வகித்த ஜனாதிபதிகளுள் மிகவும் எளிமையானவராக விளங்கி, மக்கள் ஜனாதிபதி என்று பெயர் எடுத்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்கு இன்று 78 வது பிறந்த நாள். இடை முன்னிட்டு அவரின் சொற்பொழிவு அவ்வை தமிழ் சங்க இணையதளத்தில் உங்களுக்காக ஏற்றப்பட்டுள்ளது.

Today in History

1582 - கிரெகொரியின் நாட்காட்டியை பாப்பரசர் பதின்மூன்றாம் கிரெகொரி அறிமுகப்படுத்தினார்.

1878 - தோமஸ் எடிசன் தனது மின்குமிழ் தயாரிக்கும் கம்பனியை ஆரம்பித்தார்.

1918 - மகான் ஷீரடி சாய்பாபா சமாதி தினம்

1932 - டாட்டா விமான நிறுவனம் (பின்னர் இது ஏர் இந்தியா எனப் பெயரிடப்பட்டது) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது.

1951 - மெக்சிக்கோவின் லூயி மிரமோண்டெஸ் முதற்தடவையாக கருத்தடை மாத்திரையை அறிமுகப்படுத்தினார்.

2003 - மக்கள் சீனக் குடியரசு முதற்தடவையாக சென்ஷோ 5 விண்கலத்தில் விண்வெளி வீரர்களை அனுப்பியது.

பிறப்புக்கள்

1542 - பேரரசர் அக்பர், முகலாயப் பேரரசன் (இ. 1605)

1931 - அப்துல் கலாம், இந்தியக் குடியரசுத் தலைவர்

1931 - வீரமணி ஐயர், ஈழத்துக் கவிஞர் (இ. 2003)

இன்றைய சிறப்பு மனிதர்:

 

ஏ. பி. ஜெ. அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) என அழைக்கப்படும் ஆவுல் பகீர் ஜெனுலாபுதீன் அப்துல் கலாம் (Avul Pakir Jainulabdeen Abdul Kalam) (பிறப்பு - அக்டோபர் 15, 1931, ராமேஸ்வரம்) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) ஆகியவற்றின் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் பதவியில் ஜூலை 25, 2002 முதல் ஜூலை 25, 2007 வரை இருந்தார்.

1998-ஆம் ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி மதியம் 3.45மணி பொக்ரானில் இந்தியா தனது முதல் அணுகுண்டு சோதனையை அமெரிக்காவின் செயற்க்கை கோள்களின் கண்களுக்கு மண்ணைத் தூவிவிட்டு வெற்றிகரமாக நடத்தியது. உலக நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் இந்தியா மீது திரும்பியது.

' நாடு அமைதியாக இருப்பதற்கு ஏவுகணைகள்* மிக அவசியம். இல்லாவிடில் நாம் அன்னிய நாடுகளின் மிரட்டலுக்குப் பயந்துகொண்டே இருக்க வேண்டியிருக்கும்' என்று கூறியவர் கலாம். பாதுகாப்புத் துறை மட்டுமின்றி வேறு பல துறைகளுக்கும் உதவியிருக்கிறார் கலாம் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்த கனத்தில் உலோகக் கருவிகள், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'பேஸ் மேக்கர்' போன்ற கருவிகளை உருவாக்கியுள்ளார்.

அப்துல் கலாம் 1931ஆம் ஆண்டு தென் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தாய் மொழி தமிழ். அவருடைய தந்தை இந்து மதத்தின் தலைவர்களிடமும், பள்ளி ஆசிரியர்களிடமும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அப்துல் கலாம் தன்னுடைய சுயசரிதையில் தன் படிப்புச் செலவுகளுக்காக நாளிதழ்களை விற்றதாக குறிப்பிட்டுள்ளார். கலாம் பிறந்த வீடு தற்போதும் ராமேஸ்வரத்தில் உள்ள மசூதி தெருவில் காணமுடிகின்றது. இந்த ஊருக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த வீட்டுக்கு வந்து பார்த்துச் செல்கின்றனர். கலாம் இயற்கையோடு வாழ்ந்தவர். 1964ஆம் ஆண்டு ஒரு சூறாவளிக் காற்று பாம்பன் பாலத்தையும் அதன் மேலே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ஒரு ரயிலையும் கலாமின் சொந்த ஊரான தனுஷ்கோடியையும் இழுத்துச் சென்றது. தண்ணீர் என்பது மிகுந்த அழிக்கும் தன்மை வாய்ந்தது என்று அவர் எண்ணிக் கூட பார்த்ததில்லை என்று அவருடைய சுயசரிதையான அக்னி சிறகுகள் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள்

அக்னிச் சிறகுகள்

எழுச்சித் தீபங்கள்

இந்தியா 2020

india 2010

 

இன்றைய குறள்

Today's Kural

2.

பொருட்பால்

2.

Wealth

2.1

அரசியல்

2.1

Royalty

2.1.6

குற்றங்கடிதல்

2.1.6

Avoiding faults

436

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு.

thankutRRam n-eekkip piRarkutRRang kANkiRpin

enkutRRa mAkum iRaikku.

Faultless the king who first his own faults cures, and then

Permits himself to scan faults of other men.

பொருள்

Meaning

முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.

What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others?

இன்றைய பழமொழி

Today's Proverb

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

Erumbu ora kallum theiyum

Even ants can wear out a rock (literal)

 

Meaning

Persistence never fails

இன்றைய சொல்

Today's Word

ஏவுகணை பெ.

EvukaNai

பொருள்

Meaning

1.  தொலைவில் அல்லது உயரத்தில் உள்ள இலக்கின் மீது செலுத்தபடும் எறி ஆயுதம் ( ilakin mEthu seluthappadum eri Ayutham)

1.  missile

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)

Windows XP / Outlook express users: Visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts for more help

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com or visit http://avvaitamilsangam.googlepages.com/KURAL.HTML

As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning , Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: