Saturday, April 25, 2009

Daily news letter 25-04-2009, Kuralum Porulum from Avvai Tamil Sangam

ஏப்ரல் -25, சித்திரை – 12, ரப்யுஸானி -28
Today in History:
1982 – India's first telecast colour broadcasting started on Dordarshan.
BIRTH
1969 - IM Vijayan, Indian Soccer(Football) player, was born in Trissur, Kerala
http://www.indianage.com/search.php
For more on what happened today please visit http://en.wikipedia.org/wiki/April_25
இன்றைய குறள்
அறத்துப்பால் - Virtue ( துறவறவியல் - Ascetic Virtue)
1.3.9 கொல்லாமை ( Non-Killing)

322. பகுத்துஉண்டு பல்உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
Meaning :
இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.
தினம் ஒரு சொல்
இலைஞெமல் - இலைச் சருகு, Dry leaves.
நம் பூமி; அதை காப்பது நம் கடமை:
உங்கள் வாகனத்தின் டயர்களின் காற்றழுத்தத்தை அடிக்கடி சரிகாணவும். இதனால் உங்களுக்கும் நாட்டிற்கும் எரிபொருள் மிச்சம்.
ஹெல்த்டிப்ஸ் : நெல்லிக்காய்
ஐந்து நெல்லிக்காயை எடுத்து சாறு பிழிந்து , அதே அளவு எலுமிச்சம் சாறு கலந்து, 2 ஸ்பூன் தேன் விட்டு அரைக்குவளை சுடுநீர் கலந்து காலையில் பருகுவது நல்லது. 'மல்டி வைட்டமின் மருந்துகளை" விட சக்தி வாய்ந்தது.
ஜீரண சக்திக்கு : ஒரு அவுன்ஸ் நெல்லிச்சாறு + அரை அவுன்ஸ் தேன். காலையில் பருகவும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க: ஒரு கரண்டி நெல்லிச்சாறு + பசுநெய். காலையில் சுவைக்கவும்.
இளமையாய் இருக்க: தேனில் நெல்லிக்காயை ஊறவைத்து காலை, மாலை தினம் உண்டு வாருங்கள்.
கருநெல்லி வகை அபூர்வமானது. நெடுநாள் வாழவைக்கும் தாதுப் பொருட்கள் இதில் உண்டு. அவ்வைக்கு அதியமான் கொடுத்து இதுவே.
எச்சரிக்கை: இப்பகுதியில் சொல்லப்படும் மருத்துவ ஆலோசைனைகள் வலை தளத்திலிருந்து தேடி உங்களுக்காக தரப்படுகிறது. அவ்வை தமிழ்ச் சங்கம் எதற்கும் பொறுப்பல்ல.
பொன்மொழி :
பணமும் குணமும் ஒன்றுபட்டால் மனிதனின் அந்தஸ்தும் உயரும்.

No comments: