Saturday, July 16, 2011

Daily news letter 16-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

புதுடில்லி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த தமிழ் அன்பர்களுக்கு.....

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை" எனும் பாரதியின் சொற்களை கொள்கையாய் கொண்டு வெளிவரும் "தினமணி" நடுநிலை நாளிதழ் புதிதில்லியிலிருந்தும் பதிப்பிடப்ப்படுகிறது. இன் நாளிதழை நீங்கள் பெற விரும்பினால் 011-23705701-05, 9711700590  என்ற எண்களுக்கோ அல்லது credelhi@dinamani.com எனும் மின் அஞ்சலுக்கோ தொடர்பு கொள்ளவும்.

உங்கள் பகுதியில் உள்ள தமிழ் அமைப்புக்கள்,முக்கிய நபர்கள், வழிபாட்டு தலங்கள்,பிரசித்தி பெற்ற தலங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களை இப்பதிப்பில் வெளியிட 9013084695/8860654391/99711115251/9013084685  என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆனி ௩௧ (31) , சனிக்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

 

தெரிந்து கொள்ளுங்கள் – நாளேடுகளில் முக்கியச் செய்திகள் - தமிழ் நூல் படிப்போம்  - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள்

பில்லி டிப்டன் எனும் அமெரிக்க இசைக்கலைஞர் ஒரு பெண் என 74 வயதில் அவர் இறக்கும் போதுதான் தெரியவந்தது.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

மும்பை ஜவேரி பஜாரில் வெடிகுண்டு வைத்த ஸ்கூட்டர் கண்டுபிடிப்பு  தினகரன் 

மும்பை குண்டுவெடிப்பில் இந்தியாவுக்கு உதவத் தயார்: அமெரிக்கா தினமணி

கறுப்புப்பணத்தை ஒழிக்க கடுமையான சட்டம்: பிரதிபா பாட்டீல் தினமணி 

இந்தோனேஷியாவில் எரிமலை குமுறுகிறது _ வீரகேசரி

கனிமொழியை நலம் விசாரித்த ரஜினி நியூஇந்தியாநியூஸ்

'தேர்தல் ஆர்வமின்றி யாழ் மக்கள்'  பிபிசி 

6 வாரம் தொடரும் பார்லி. மழைக்கால கூட்டத்தொடர்  தினமலர்

இந்தியாவுடன் பேச்சு: கிலானி மகிழ்ச்சி தினமலர்

சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் ராஜினாமா ஏற்கப்பட்டது தட்ஸ்தமிழ்

சச்சினுக்கு ஸ்டிராஸ் பாராட்டு மாலை சுடர்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

தமிழ் நூல் படிப்போம் 

Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext:

Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai, 1998-2010.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  

Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

ரா.பி. சேதுபிள்ளை  அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்)  20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....

12.கடற்கரையிலே கம்பர்

பாண்டி நாட்டுக் கடற்கரையிலுள்ள பழம் பதிகளில் ஒன்று தருப்பசயனம் என்னும் திருப்புல்லணை. திருப்புல்லாகிய தருப்பையைத் தலையணையாக வைத்து, கருங்கடலை நோக்கிக் கருணையங் கடலாகிய இராமன் வரங்கிடந்தமையால் திருப் புல்லணை என்னும் பெயர் அப்பதிக்கு அமைந்த தென்பார். வானர சேனையுடன் நாடும் மலையும் கடந்து வந்த இராமன் இலங்கைக்கு எதிரேயுள்ள அக்கடற்கரையை அடைந்தான்; குறுக்கே நின்ற கடலைக் கடந்து எவ்வாறு அரக்கர் நாட்டுக்குச் செல்வது என்றெண்ணிக் கவலையுற்றான். அந்த மனப்பான்மையோடு அவ் வீரன் நின்ற நிலையையும் நெடுங்கடல் அவனை வரவேற்ற நீர்மையையும் கவிக் கண்ணாற் கண்ட கம்பர் பேசுகின்றார்:-

"கருங்கடலே! அரக்கர் வாழும் இலங்கையின் நாற்புறமும் அரணாக நின்று அருங்காவல் புரிகின் றாயே! அவ் வரக்கர் அறநெறி துறந்தவர் என்பதை நீ அறியாயோ? 'இரக்கமற்றவர் அரக்கர்' என்ற வாய்மொழியும் கேட்டிலையோ? உன் காவலால் அன்றோ அன்னார் நிறுவிய வல்லரசு பின்னமின்றி வாழ்கின்றது? 'மா நீர் சூழ்ந்த இலங்கைக்கு மாற்றார் எவரேனும் வரமுடியுமா?' என்று அரக்கர் மார் தட்டிப் பேசுகின்றார்களே! 'அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை' என்று மிஞ்சி அறைகின்றார்களே! உன் துணை யுடைமையா லன்றோ இப்படித் துள்ளுகின்றார்கள்?

அறப் பெருங்கடலே! அரக்கர் வேந்தன் மறக்கள வேள்வி செய்பவன் என்பதை நீ மறந்தனையோ? பஞ்சவடிச் சோலையில் அவன் செய்த பாதகச் செயலை நீ அறியாயோ? மாசற்ற சீதையை நெஞ்சார வஞ்சித்துக் கவர்ந்தானே அந்நிருதர் வேந்தன்! தன்னந் தனியளாய்த் தவச்சாலையில் இருந்த கற்பின் செல்வியை எடுத்துச் சென்று சிறைச்சாலையில் வைத்த அவன் சிறுமையை நீ அறியாயோ? அசோக வனத்தில் சோகமே வடிவாயமைந்த அம் மங்கை, கணவனைத் திக்கு நோக்கித் தொழுவதும், விக்கி விம்மி அழுவதும், மக்கி மடிந்து விழுவதும் கண்டு இரக்கமற்ற அரக்கி யரும் தளர்ந்து ஏங்குகின்றார்களே! அவள் வடிக்கும் கண்ணீர் இலங்கைக் கோட்டையை இடித்து நொறுக்காமல் விடுமோ? 'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம்' என்பது ஆன்றோர் மொழியன்றோ?

"அலைகடலே! அம் மங்கையின் கணவன் - செங்கமலக் கண்ணன்-வெஞ்சிலை வீரன், இதோ! உன் கரையில் வந்து நிற்கின்றான். அவன் பெருமையை அறிந்துதான் முன்னிலும் அதிகமாய் முழங்கு கின்றாயோ? சீதநீர்த் துளிகளைத் திரைக் கரத்தால் எடுத்து அவன் திருவடியில் தெளிக்கின்றாயோ? கோமகன் வந்தான் என்று குதிக்கின்றாய் போலும்? ஐயோ! அவ் வண்ணலின் நிலையை நீ அறிந்தாய் அல்லையே! ஆழிசூழ் உலமெல்லாம் அரசாளும் உரிமை துறந்து, பூழிவெங் கானம் போந்த புண்ணி யன் அவன்; கானகத்தில் கற்படை மனையாளைப் பறிகொடுத்துக் கடுந்துயர் உழந்த காதலன். மானம் அவன் மனத்தை அறுக்கின்றது. அரக்கர் நகரில் சிறைப்பட்ட சீதையின் சோகம் அவன் உள்ளத்தை உருக்குகின்றது; தூது சென்ற அனுமனிடம் அவள் சொல்லியனுப்பிய செய்தியை நினைந்து நினைந்து நெஞ்சம் துடிக்கின்றான் அவன்; அவள் குறிப்பிட்ட கால அவதி நெருங்குகின்றதே என்று மறுக்கம் உறுகின்றான்; காடும் மலையும் கடந்து வருகையில் சால நாள் கழிந்ததே என்று கவலைப்படுகின்றான்.

"மறிகடலே! நிலப்பரப்பின் எல்லை கண்ட வீரன் இப்போது நீர்ப் பரப்பின் தொல்லை கண்டு துளங்கு கின்றான்; உறக்கம் நீத்த கண்களோடு உன்னைப் பார்க்கின்றானே! + உன்னை நோக்கி அவலமே வடிவ மாக நிற்கும் அண்ணலை மணிவண்ணன் என்பார்கள்; தாமரைக் கண்ணன் என்பார்கள். ஆயினும் மனத்துயரால் மணிவண்ணத்தின் ஒளி மழுங்கி விட்டதே! இரவும் பகலும் உறங்காத கண்கள் செங் கமலத்தின் செவ்வி யிழந்தனவே!* அவன் அகத்தில் அடங்கிய ஆறாத் துயரம் முகத்தில் நன்றாய்த் தெரிகின்றதே! தூங்காத கண்களில் இன்னும் துலக்க மாகத் தோன்றுகின்றதே!

+ "பொங்கிப் பரந்த பெருஞ்சேனை

      புறத்தும் அகத்தும் புடைசுற்றச்

சங்கிற் பொலிந்த கையாளைப்

      பிரிந்த பின்பு தமக்கினமாம்

கொங்கிற் பொலிந்த தாமரையின்

      குழவும் துயில்வுற்று இதழ்குவிக்கும்

கங்குற் பொழுதும் துயிலாத

      கண்ணன் கடலைக் கண்ணுற்றான்"

      --கம்பராமாயணம் - கடல் காண் படலம்

"முத்து விளைக்கும் முந்நீரே! அறவோனாகிய அப் பெருமானைக் கண்டு நீ அன்பு கொண்டாய்; மெல்லிய தென்றலால் வரவேற்றாய்; அழகிய முத்துக்களைக் கையுறையாக உன் கரையிலே வைத்தாய்; அந்தோ! வந்தவன் மனநிலையறியாது நடந்து கொண்டாயே! உன் வரவேற்பு வெந்த புண்ணில் வேல் எறிந்தாற்போல் அவ் வள்ளலை வாட்டி வருத்துகின்றதே; எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்துவிட்டாயே! நீ விடுத்த மெல்லிய பூங்காற்று அவன் மேனியை வெதுப்புகின்றதே! நஞ்சுபோல் நலிகின்றதே! அதற்கும் மேலாக உன் முத்துக்கள் சீதையின் முறுவலை நினைப்பூட்டி, கனலோடு காற்றும் கலந்தாற்போல் கடுவேகத்தை அவன் மனத்தில் ஊட்டி விட்டனவே!

"தூர மில்லை மயில் இருந்த சூழல் என்று மனம் செல்ல

வீர வில்லி நெடுமானம் வெல்ல நாளும் மெலிவானுக்கு

ஈர மில்லாத நிருதரோடு என்ன உறவுண்டு உனக்கு ஏழை

மூரல் முறுவல் குறிகாட்டி முத்தே! உலகை முடிப்பாயோ?" +

      + கம்பராமாயணம் - கடல் காண் படலம்

"தென் கடல் முத்தே! நீரிலே பிறந்து, நீரிலே வளர்ந்த உனக்கு ஈரமில்லாத அரக்கரோடு எப்படி உறவு உண்டாயிற்று? உனக்கும் அவர்க்கும் ஒருவித உடன்பாடும் இல்லையே! பண்பாடற்ற அரக்கரோடு சேர்ந்து ஐயன் மனத்தைப் புண்படுத்தி விட்டாயே! தன்னோடு சீதை கானகம் நோக்கிப் புறப்படும் பொழுது,

"முல்லையும் கடல்முத்தும் எதிர்ப்பினும்

வெல்லும் வெண்ண கையாய்!"

என்று ஐயன் சொல்லியதை இங்கு நினைப்பூட்டி எல்லையற்ற இடர் தந்தாயே! இப்பொழுது அவ்வீரன் மனம் முறுகி நிற்கின்றது; வீணாகக் காலம் கழிகின்றதே என்ற விறுவிறுப்பு எழுகின்றது; பரபரப்புண்டாகிறது. வரைகடந்த சீற்றத்தால் அவான் வரிசிலை யெடுத்து வளைப்பானாயின் இவ் வுலகம் என்னாகும்? சரமாரியால் சராசர மெல்லாம் சாம்பராய் விடுமே!

"நித்திலம் விளைக்கும் நெடுங்கடலே! உன் முகத்தைக் கண்டு பெருங்கோபமும் தாபமும் பிறந்தா லும்அவற்றை அடக்கும் திறம் உடையவன் அவ் வீரன்.செம்மை சான்ற நெறி திறம்பி, ஒருபோதும் வெம்மை விளைக்க அவன் ஒருப்படமாட்டான். 'பொறுத்தார் பூமியாள்வார்; பொங்கினார் காடாள் வார்'என்னும் முதுமொழியின் உண்மை யறிந்து வாழ்பவன் அவன்; 'என்றும் அறம் வெல்லும்; பாவம் தோற்கும்' என்ற கொள்கையை நன்றாக மனத்திற் கொண்டவன்; அரக்கர் செய்த தீமைக் காக அனைத்துலகையும் ஒழிக்க ஒருபோதும் கருத மாட்டான். இத் தகைய வீரனுக்குத் துணைபுரித லன்றோ உனக்குப் பெருமை தரும்? காலத்திற் செய்த நன்றி சிறிதெனினும் அது ஞாலத்தின் மாணப் பெரிது என்பது பொய்யாமொழி யன்றோ? அறவோரை ஆதரிக்கும் ஆழியே வாழி! அல்லோரை அழித்தொழிக்கும் ஆழியே, வாழி!" என்று வாழ்த்தி வணங்கினார் கவிஞர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3.21

சூது

2.3.21

Gambling

குறள் எண்  932

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.

onReithi nooRizhakkum sudharkkum uNdAnkol

nanReithi vAzhvathor aaRu

Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way
That they may good obtain, and see a prosperous day?.

பொருள்

Meaning

ஒரு பொருள் பெற்று நூறு மடங்கு பொருளை இழந்து விடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ

Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ? .

இன்றைய பொன்மொழி

மிகக்கொடிய பகைவனிடத்தும் செம்மையான மொழியையே பயன்படுத்த வேண்டும்.

Member to Members

1.    Iyer boy (Veg. Non-smoker & Non drinker.) looking for a suitabale girl in the age of 35 years & above. Interested person can contact Mr.Hariharan at khh23pink@yahoo.com  or at 9871436002

2.    If you know some details about this book please send info to  rmk@aryacom.com . Raga chikitcha:-  I am on the look out for a  book    titled: Raga chikitcha" Many Hundreds of years before our forefathers have written the effect of various ragas and their medicinal aspect in curing various diseases. Some one can help me to get a copy or inform the site to get further details. Meena Venki

3.    இம் மடல் பற்றிய உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் தயவு செய்து பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். உங்களின் கருத்துக்கள் இம்மடலையும், இச்சங்கத்தையும் மேலும் வளர்க்க உதவும்.

4.    . தமிழ் மொழி, கலை, கலாச்சாரம்,பண்பாடு ஆகியன வளர்க்க வெவ்வேறு சங்கங்கள்/குழுக்கள்  பல இடங்களில் உருவாகியுள்ளது. அது மட்டுமன்றி இச்சங்கங்கள் வெவ்வேறு இடங்களிருந்து புலம் பெயரும் தமிழர்களுக்கு பல உதவிகள் செய்யவும் உதவமுடியும். உலகெங்கிலும் உள்ள  இச்சங்கங்கள் / குழுக்கள் / பற்றிய தகவல்களை நம் அனைவரின் நலனிற்காக தொகுத்து  அளிக்கும் பணியினை  அவ்வை தமிழ்ச் சங்கம்  செய்ய விரும்புகிறது. உங்களின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள சங்கங்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற மின்-அஞ்சலுக்கு எழுதவும். சங்கம் பற்றிய தகவல், அதன் பணிகள், முகவரி, தொலைபேசி எண்கள், மின்-அஞ்சல்வலைத்தள முகவரி,   தொடர்பு அதிகாரியின் பெயர் ஆகியவை அவசியம் வேண்டும்.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: