Thursday, July 14, 2011

Daily news letter 14-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

  • இம் மடல் பற்றிய உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் தயவு செய்து பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கிறோம். உங்களின் கருத்துக்கள் இம்மடலையும், இச்சங்கத்தையும் மேலும் வளர்க்க உதவும்.
  • . தமிழ் மொழி, கலை, கலாச்சாரம்,பண்பாடு ஆகியன வளர்க்க வெவ்வேறு சங்கங்கள்/குழுக்கள்  பல இடங்களில் உருவாகியுள்ளது. அது மட்டுமன்றி இச்சங்கங்கள் வெவ்வேறு இடங்களிருந்து புலம் பெயரும் தமிழர்களுக்கு பல உதவிகள் செய்யவும் உதவமுடியும். உலகெங்கிலும் உள்ள  இச்சங்கங்கள் / குழுக்கள் / பற்றிய தகவல்களை நம் அனைவரின் நலனிற்காக தொகுத்து  அளிக்கும் பணியினை  அவ்வை தமிழ்ச் சங்கம்  செய்ய விரும்புகிறது. உங்களின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள சங்கங்கள் பற்றிய தகவல்களை எங்களுக்கு avvaitamilsangam@gmail.com என்ற மின்-அஞ்சலுக்கு எழுதவும். சங்கம் பற்றிய தகவல், அதன் பணிகள், முகவரி, தொலைபேசி எண்கள், மின்-அஞ்சல்வலைத்தள முகவரி,   தொடர்பு அதிகாரியின் பெயர் ஆகியவை அவசியம் வேண்டும்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆனி ௨௯ (29) , வியாழன் கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் - நாளேடுகளில் முக்கியச்  செய்திகள் - தமிழ் நூல் படிப்போம்  - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members  

தெரிந்து கொள்ளுங்கள்

முதலையின் கடினமான ஓட்டைக் கூட ஜாகுவார் கடிக்கக் கூடியது

நாளேடுகளில் முக்கியச் செய்திகள் – Top Stories in News papers

மும்பை தொடர் குண்டுவெடிப்பு - 21 பலி; 150 காயம் Bharath News Online 

தம்பியின் உடலை அழுதபடி ஆப்கானிஸ்தான் அதிபர் அடக்கம் செய்தார் தினத் தந்தி

கலாநிதி மாறன் போலீஸில் ஆஜராக 26-ம் தேதி வரை அவகாசம் தினமணி

பங்குச் சந்தையில் சரிவு ஆரம்பம் தினமணி

சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் தட்ஸ்தமிழ்

கடாபி பதவி விலகத்தாயாராக உள்ளார் பிரான்ஸ் அலைகள்

மஞ்சளை உடனடியாக விற்க வேளாண் துறை பரிந்துரை தினமணி

 இந்தியாவுடன் மோதுவது ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கு இணையானது தினகரன்

ஜெகன் சொத்து குவிப்பு : சிபிஐ விசாரிக்க உத்தரவு! தினகரன்

இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் உலக செஸ் போட்டி தினமணி

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

தமிழ் நூல் படிப்போம் 

Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext:

Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai, 1998-2010.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  

Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

ரா.பி. சேதுபிள்ளை  அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்)  20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....

10. கடற்கரையிலே பண்டித சோழன்

தமிழ் நாட்டுத் துறைமுக நகரங்களுள் ஒன்று நாகபட்டினம். நாகர் என்ற பழந் தமிழ்க் குலத்தார் ஒரு காலத்தில் அங்கே சிறப்புற்று வாழ்ந்திருந்தார் என்பர். சோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினம் ஆழிவாய்ப்பட்டு அழிந்த பின்னர் நாக பட்டினம் தலையெடுத்தது; வணிகத்தால் வளமுற் றது. தஞ்சையைத் தலைநகராக கொண்ட சோழ மன்னர் நாகையைத் திருத்தி வளர்த்தனர். அம் மன்னரில் தலை சிறந்தவன் இராஜேந்திரன். அவன் தன் நிலப் படையால் கங்கை வரையுள்ள நாடுகளை வென்றான். கப்பற்படையால் கடாரம் முதலிய பல தேசங்களை வென்றான். அவ் வெற்றித் திறனை வியந்து 'கங்கை கொண்டான்' என்றும், 'கடாரம் கொண் டான்' என்றும் அவனைத் தமிழகம் பாராட்டியது. தமிழ்ச்சுவை யறிந்த அம் மன்னனைப் 'பண்டித சோழன்' என்று கலைவாணர் கொண்டாடினர். இத் தகைய காவலன் நாகைமா நகர்க்கு ஒரு கால் எழுந் தருளியபோது அந் நகரம் ஓகையுற்று எழுந்தது; கடற் கரையில் விண்ணளாவிய பந்தலிட்டு வரவேற்றது. அக் காட்சியைக் கண்டு பெரு மகிழ்ச்சியுற்ற மன்ன வன் பேசலுற்றான்:-

"
நல்லோர் ஏத்தும் நாகைமா நகரே ! என்றும் உள்ள தமிழகத்தில் நீ தொன்றுதொட்டு இருந்து வருகின்றாய். சோழ நாட்டுக் கடற்கரை நகரங்களுள் இன்று நீயே தலைமைசான்றாய் ! கடல் வளம்படைத்த உன்னைக் 'கடல் நாகை' என்று பாடினார் திருநாவுக் கரசர். இருமையும் தரும் ஈசனார் கோயில் இங்கு அருமையான காட்சி தருகின்றது. காரோணம் என் னும் திருக்கோயிலைக் கண்பெற்றவர் கானுருதிப்பரோ?

"
மன்னர் போற்றும் மணிநகரே ! இறைவன் அருளால் என் அரும்பெருந் தந்தையார்-இராஜ ராஜன்-நிலப்படையும் நீர்ப்படையும் பெருக்கினார்; செருக்குற்ற மாற்றரசரை நொறுக்கினார்; கோதாவரி முதல் குமரி வரை ஆணை செலுத்தினார்; கடல் சூழ்ந்த பல நாடுகளில் புலிக் கொடியை நாட்டினார். சென்ற விடமெல்லாம் செரு வென்று ஜெயம் பெற்ற மன்னரை 'ஜெயங்கொண்டான்' என்று தமிழகம் சீராட்டி மகிழ்ந்தது. அவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்து வாழ முயல்கின்றேன்; அம் மன்னர் அடிச்சுவடுபற்றி இந் நாட்டை ஆள ஆசைப்படுகின்றேன். அவர் காலத்தில் வெற்றிச்சுவை கண்ட தமிழ்ச்சேனை மேன்மேலும் வாகைமாலை சூட விரும்பிற்று; வடக்கே கங்கையாறளவும் சென்று மாற்றாரை வென்றது; பொங்கு கங்கையைப் பொற்குடத்தில் எடுத்து வந்தது; 'கங்கை கொண்டான்' என்னும் விருதுப் பெயரை எனக்குத் தந்தது.

"
நலமார்ந்த நன்னகரே ! கங்கையின் நீரை என் தண்ட நாயகன் கொண்டு வந்தான். கோதாவரிக் கரையில் நான் அப்படைத் தலைவனை வரவேற்றேன்; கங்கையைக் கொண்டேன்; புதிதாகச் சோழநாட்டில் நான் கட்டிய ஏரியில் அந் நீரை உகுத்தேன்; 'சோழ கங்கம்' என்னும் பெயரையும் அதற்கு அளித்தேன்; கொள்ளிடத்திலிருந்து கால்பிடித்துக் காவிரியின் நீரை அந்த ஏரியிற் பெருக்கினேன். கங்கையும் காவிரியும் கலந்த ஏரியில் என்றும் நீர் பொங்கிப் பெருக வேண்டுமென்று இறைவனைத் தொழுதேன். அப்போது 'ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்' என்ற தமிழ்ப் பாட்டை இசைவாணர் அந்த ஏரியின் கரையில் நின்று பாடினர். அதுகேட்டு என் உள்ளம் உருகிற்று. சோழ கங்கத்தின் கருணையால் வெற்றிட மெல்லாம் இப்போது விளைநில மாயிற்று; காடு மேடெல்லாம் கழனியாயின. சோழநாட்டை வள நாடாக்கி, வளவன் என்ற பெயரை எம் குலத்தார்க்கு வழங்கிய ஆதிமன்னன்-திருமா வளவன்-'குளம் தொட்டு வளம் பெருக்கினான்' என்று பட்டினப் பாலை பாராட்டுவதைப் படித்தேன். ஒல்லும் வகையால் அவ் வளவனைபோல் வேளான்மையை ஆதரிக்க ஆசைப் படுகின்றேன். படையாற்றலினும் பசியாற்றலே சிறந்த தென்பதை எண்ணி எண்ணி மனம் களிக் கின்றேன். கங்கை கொண்டேன்; பயிர் முகம் கண்டேன். ஆதலால், 'கங்கைகொண்டான்' என்ற விருதுப் பெயரைப் போற்றுகிறேன்.

"
வளவன் நாட்டுத் துறைமுகமே! இந் நாட்டில் பசி ஒழிந்தால்மட்டும் போதுமா? பொருளும் பெருக வேண்டும் என்பது என் ஆசை. தாழ்விலாச் செல்வம் வாணிகத்தால் வரும். இதை உணர்ந்தன்றோ தமிழ் நாடு மூவேந்தரும் துறைமுக நகரங்களைக் குறிக் கொண்டு காத்தனர்? சோழநாட்டுக் கரையிலே திருமாவளவன் திருத்தியமைத்த பூம்புகார் நகரம் யார் செய்த தீவினையாலோ அழிந்து பட்டது. ஆயினும், நாக பட்டினமே! உன்னைக் கண்டு ஒருவாறு வாட்டம் தீர்ந்தேன். அந் நாளில் புகார் நகரத்தில் நிகழ்ந்த வாணிகம் இந் நாளில் இங்கு நடைபெறுகின்றது. பல இனத்தார், பல மதத்தார் இந் நகரிலே கலந்து வாழ் கின்றார்கள். சைவம், வைணவம், சமணம், சாக்கியம் ஆகிய நால்வகைச் சமயங்களும் நேசப் பான்மை யுடன் இந் நகரில் நிலவக் காண்கின்றேன். கடார தேசத்தை ஆளும் அரசன் சாக்கியச் சமயத்தைச் சார்ந்தவன். அந் நாட்டார் பலர், இந் நகரில் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வழிபாடு செய்வதற்காகப் புத்த விகாரம் ஒன்று இந் நகரிலே கட்ட விரும்பினான் கடார மன்னன்; என் தந்தையாரிடம் அதற்கு அனுமதி வேண்டினான். உடனே அனுமதி கொடுத்தார் அவர்; அம் மட்டில் அமையாது ஆனைமங் கலம் என்ற ஊரையும் அக் கோயிலுக்கு நன்கொடையாக அளித்தார். சூடாமணி விகாரம் என்னும் பெயரால் இந் நகரத்திலே அந்த ஆலயம் சிறந்து விளங்குவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

"
வணிகர் நிறைந்த மணி நகரே! கடார தேசத் திற்கும், தமிழ் நாட்டிற்கும் நினைப்புக்கு எட்டாத நெடுங்காலமாக வர்த்தக உறவு உண்டு. +காழகம் என்று முன்னாளில் அழைக்கப்பட்ட அந் நாட்டின் விளைபொருளும் நுகர்பொருளும் தமிழ் நாட்டுத் துறைமுகத்தில் வந்து இறங்கிய வண்ணமா யிருந்தன. காழக நட்டார் காவிரித் துறைமுகத்தில் குடியேறியவாறே திரை கடலோடிய தமிழகத்தார் காழகம் சாவகம் முதலிய நாடுகளில் வாணிகத்திற்காகச் சென்று வாழ்ந்தார்கள். அங்குள்ள தக்கோலம், மலையூர், பண்ணை ஆகிய ஊர்ப் பெயர்கள் தமிழர் இட்ட பெயர்கள் என்பதில் தடையமுண்டோ?
----------
+:"
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்" -பட்டினப்பாலை.

"
வாகை சூடிய நாகையே! இன்று கடாரத்தை ஆளும் அரசன் அந் நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் உள்ள பண்டை உறவை மறந்தான்; புத்த விகா ரத்தை நாம் ஆதரித்த அருமையையும் புறக்கணித் தான்; சித்த விகாரத்தால் சீனத்தாரோடு புத்துறவு பூண்டான். அவ் வர்த்தக உறவினால் கடாரத்திலுள்ள தமிழர் கையற்றார். தமிழகத்திற்கும் வாணிக வளம் சிறிது குறைவதாயிற்று. முறை தவறி நடந்த கடார மன்னர்க்குத் தமிழாற்றலை அறிவித்தற்காகவே நமது கடற்படை எழுந்தது. கடாரம் கிடுகிடுத்தது; குற்ற முள்ள மன்னவன் நெஞ்சு குறுகுறுத்தது. அவன் நமது அடியில் முடியை வைத்து வணங்கினான்; பிழை பொறுக்கும் படி வேண்டினான்; முறையாக திறை செலுத்த இசைந்தான்; 'இனி என்றும் தமிழ் நாட்டின் நலத்திற்கு மாறாக நடப்பதில்லை' என்று வாக்களித்தான். வடுப்படாமல் வாகைமாலை சூடிய தமிழ்ச் சேனை இந் நாகைத் துறைமுகத்தில் வந்து இறங்கியபொழுது இங்கெழுந்த எக்களிப்பை என்னென் றுரைப்பேன்! 'கங்கை கொண்ட தமிழரசன் கடாரமும் கொண்டான்' என்று கவிஞர் கொண்டாடினார்கள்; பாட்டாலும் உரையாலும் என் படைத் திறமையை பாராட்டினார்கள். அப் பாராட்டெல்லாம் என் குடிபடைகளுக்கே உரியவாகும். ஒன்றை மட்டும் நான் ஒப்புக்கொள்வேன். கங்கை கொண்டதனால் கழனி கண்டேன்; கடாரம் கொண்டதனால் கடல் வளம் பெற்றேன். இனி என் நாட்டுக்கு என்ன குறை?

"
தகைமை வாய்ந்த திருநகரே! திருவள்ளுவர் கூறியவாறு தள்ளா விளையலும், தாழ்விலாச் செல்வமும் உடைய தமிழ் நாட்டில் தக்காரும் வாழ்வதறிந்து மனம் தழைக்கின்றேன். தஞ்சை மாநகரில் என் தந்தையர் எடுத்த திருப்பணி இனிது நிறைவேற உறுதுணையாக நின்றவர் கருவூர்த் தேவர் என்பதை நாடறியும். அவர் மும்மையும் உணர்பவர்; ஒருமையே மொழிபவர். அவர் ஆசியால் நான் வாசி பெற்றேன். கங்காபுரி என்னும் கங்கை கொண்ட சோழபுரத்தில் ஈசனார்க்கு நான் எடுத்த திருக்கோயிலை கருவூர்ப் பெரியார் பாடியருளினார். அவர் பாடிய இசைப் பாட்டால் என் பெயர் தாங்கிய நகரின் புகழ் எட்டுத் திசையிலும் பரவலாயிற்று. அம்மட்டோ? அருள் நூலும், பொருள் நூலும் அவர் வாயிலாகக் கேட் டறிந்த என்னைப் 'பண்டித சோழன்' என்று தமிழகம் பாராட்டத் தொடங்கிற்று. அப் பட்டத்தை தாங்கு தற்குரிய தகுதி யில்லையே என்று ஏங்குகின்றது என்னுள்ளம்.

"
கற்றவர் நிறைந்த நற்றவ நகரே! கடல் நாகை யாகிய நீ, கலை நாகையாகவும் விளங்குகின்றாய்! இங் குள்ள கலைவாணர் உதவியால் அருந்தமிழ்க் கலைகளை ஓதி யுணர்ந்து நான் பண்டித சோழன் ஆக முயல் வேன். மெய்ஞ்ஞான பண்டிதனாகிய முருகவேள் அருளால் முத்தமிழறிந்து வாழ்வேன். எல்லோரும் இன்புற்று வாழ ஈசன் அருள் புரிக " என்று பணிந்து விடை கொண்டான் பண்டித சோழன்

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3,20

கள்ளுண்ணாமை

(kaL  uNNAmai)

2.3.20

Avoiding Drunkkenness

Avoid drunkenness and addiction which benumb senses and lead to vileness, penury, shame and insanity

குறள் எண்  930

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

kaLLuNNaap pOxhthiR kaLithAnaik kANunkAl

unnAnkol uNdathan sorvu

When one, in sober interval, a drunken man espies,
Does he not think, 'Such is my folly in my revelries'?.

பொருள்

Meaning

ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?.

When (a drunkard) who is sober sees one who is not, it looks as if he remembered not the evil effects of his (own) drink.

இன்றைய பொன்மொழி

வாதாட பலருக்குத் தெரியும். உரையாட சிலருக்கே தெரியும்.      

Member to Members

Commercial shop/office space at Mayur Vihar - Phase III for sale : The  exact address of the same is : Vardhman Mayur Plaza, 1st Floor , Shop no : 16, behind DDA MIG Flats, Mayur Vihar Phase III, Delhi. The size of the flat is 100 sq ft, which is ideal for professionals who wants  to have their own own office, or to Doctors, who want to open their clinic, etc. I would like to sell this flat to own people . Those interested may  contact  dMr.Venkatesh  on numbers : 98111 61370 / 0120 4221 335 . 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enbling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: