Tuesday, July 12, 2011

Daily news letter 12-07-2011, Kuralum Porulum from Avvai Tamil Sangam

  • தினம் ஒரு குறள் செய்தி மடல் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்காக கடந்த மூன்று வருடங்களாக தொடர்ந்து வெளிவருகிறது. சில மாற்றங்கள், சில பகுதிகள் குறைப்பு, சேர்ப்பு ஆகியன அவ்வப்போது நடைபெறுகிறது.

திருக்குறள் 1000 மாவது குறளை நெருங்கும் இத்தருணத்தில், அடுத்து என்ன செய்வது, இந்த செய்தி மடலை மேலும் ஒரு பயனுள்ள மடலாக மாற்றுவது எப்படி என்பது பற்றி அறிய உங்கள் கருத்துக்களை வேண்டுகிறோம்.

உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் நீங்கள் பதிவு செய்யலாம்.

இம்மடலைப் படிக்கும் அனைவரையும், சிறிது நேரம் ஒதுக்கி உங்கள் கருத்துக்களை http://www.surveymonkey.com/s/5HT6YG7 என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கிறோம்.

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

 

ஆனி ௨௭  (27) , செவ்வாய்க்கிழமை  , திருவள்ளுவராண்டு 2042

 பொருளடக்கம்

தெரிந்து கொள்ளுங்கள் -- தலைப்புச் செய்திகள்- தமிழ் நூல் படிப்போம்  - இன்றைய குறள் – இன்றைய பொன்மொழி – Member to Members (NEW)

தெரிந்து கொள்ளுங்கள்

13 தமிழ்த் திரைப்படங்களை இயக்கிய அமெரிக்கரான எல்லிஸ் டங்கன் எம். ஜி. ஆர் மற்றும் என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரை அறிமுகப்படுத்தியவர்.

நாளேடுகளில் முக்கிய செய்திகள் – Top Stories in News papers

அதிமுக நில அபகரிப்புகளையும் விசாரிக்க வேண்டும்: கருணாநிதி  தினமணி 

சென்செக்ஸ் 137 புள்ளிகள் சரிவு வெப்துனியா

கபில் சிபலுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ...  தினத் தந்தி 

விரிசலடையும் அமெரிக்கா - பாக். உறவுகள் பிபிசி

2 கேபினட் பதவிகளை தி.மு.க., கேட்காதது ஏன்?  தினமலர் 

 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது தொடரை வென்று இந்தியா சாதனை தினகரன்

தமிழகத்தில் 950 வகை நோய்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம் ... தட்ஸ்தமிழ்

ஸ்பெஷல் ஒலிம்பிக்ஸ்: தமிழக வீரர்-வீராங்கனைகளுக்கு 12 பதக்கம் தட்ஸ்தமிழ்

சர்வதேச நீதிமன்றத்தில் தேவஸ் நிறுவனம் வழக்கு தினமணி

விளையாட்டுத் துறை ஆணைய வளாகத்தில் அதிரடி சோதனை வெப்துனியா

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

தமிழ் நூல் படிப்போம் 

Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned images version of this work. This etext has been prepared via Distributed Proof-reading implementation of Project Madurai. We thank the following volunteers for their assistance in the preparation of this etext:

Sakthikumaran, Senthan Swaminathan, S. Karthikeyan, Nalini Karthikeyan, Nadesan Kugathasan, R. Navaneethakrishnan, Sri Ganesh, Senthilkumar Sugumar, Venkatesh Jambulingam and Ganesan . Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland

© Project Madurai, 1998-2010.

Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation  of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.  

Details of Project Madurai are available at the website http://www.projectmadurai.org/

ரா.பி. சேதுபிள்ளை  அவர்களின் கடற்கரையிலே ( இலக்கியக் கட்டுரைகள்)  20 இலக்கியக் கட்டுரைகள் நாளுக்கொன்றாக ....

8. கடற்கரையிலே திருமங்கை மன்னன்

தமிழ் நாட்டிலே, கலைமணம் கமழும் துறைமுக நகரங்கள் சில உண்டு. அவற்றுள்ளே தலை சிறந்தது மகாபலிபுரம். அங்குள்ள பாறைகளெல்லாம் பழங்கதை சொல்லும்; கல்லெல்லாம் கலைவண்ணம் காட்டும். அந் நகரின் கடற்கரையிலே அனந்த சயனத்தில் ஆனந்தமாய்ப் பள்ளிகொண்டுள்ளார் திருமால். தலசயனம் என்பது அக்கோயிலின் பெயர். அங்குள்ள பெருமாளை வணங்கித் தமிழ்ப் பாமாலை அணிந்து போற்றும் ஆசையால் வந்தடைந்தார் திருமங்கை யாழ்வார்; பள்ளிகொண்ட பரந்தாமனது கோயிலருகே நின்று நெடுங்கடலை நோக்கிப் பேசலுற்றார்:-

"
தொண்டை நாட்டுப் பண்டைத் துறைமுகமே! நீ, மல்லை என்னும் பெயருடையாய்; எல்லையற்ற புகழுடையாய். உன் கடற்கரையிலே குன்றும் மணலும் கொஞ்சி விளையாடும். உன் அளப்பரும் பெருமையை அறிந்தன்றோ மாமல்லை என்று உன்னைப் போற்றினார் எங்கள் + மாதவச் செல்வர்?
---
+
பூதத்தாழ்வார் மகாபலிபுரம் என்னும் மல்லையிலே பிறந்த மாதவர்.

"
மா மல்லை, கோவல் மதிட்குடந்தை என்பரே
ஏவல்ல எந்தைக்கு இடம்" - என்பது அவர் திரு வாக்கு


"
அவர் அருள் வாக்குப் பெற்ற நீ, மேன்மேலும் வளமுற்றாய்; வனப்புற்றாய்; தமிழகத்தை ஆளும் பல்லவ மன்னரின் செல்வப் பாவையாய் விளங்கு கின்றாய். மாமல்லன் என்னும் மாநில மன்னன் சிறப் பாக உன்னைச் சீராட்டினான். அவன் பல்லவர் குல திலகன்; பகைவரை வென்று அடக்கிய வீரன்; வட நாட்டிலுள்ள வலிமை சான்ற வாதாபிக் கோட்டை யைத் தகர்ந்தெறிந்த தலைவன். அவ் வீரவேந்தன் உன்பால் அன்புகொண்டான். காவிரித்துறை முகத்தைத் திருத்திய திருமாவளவனைப் போல் உன் துறையைத் திருத்திய திருமாவளவனைப் போல் உன் துறையைத் திருத்தி யமைத்தான் மாமல்லன். அன்று முதல் + மாமல்லபுரம் என்ற பெயரும் உனக்கு அமைவதாயிற்று

 

-------
+
மாமல்லபுரம் என்ற பெயர் மகாபலிபுரம் என மருவி வழங்குகின்றது.

"
மல்லைமா நகரே! மாமல்லன் அரசு வீற்றிருந்த நாளில் நீ அடைந்த புகழுக்கு ஓர் அளவுண்டோ? கடல் சூழ்ந்த இலங்கையின்மீது படையெடுத்தான் மாமல்லன். அப் படையின் பரப்பையும் சிறப்பையும் நீ நன்கு அறிவாயே! உன் துறைமுகத்திலன்றோ அச் சேனை வெள்ளம் கப்பலேறி இலங்கையை நோக்கிச் சென்றது? மண்ணாசை பிடித்தவனல்லன் மாமல்லன். அவன் இலங்கையை வென்று அரசாள விரும்பினா னல்லன். அந் நாட்டு மன்னன்-மான வர்மன்-மாற்றார் செய்த சூழ்ச்சியால் நாடு இழந்து மாமல்லனை வந்தடைந்தான். அவன் வடித்த கண்ணீர் மல்லன் உள்ளத்தைக் கரைத்தது. தஞ்சமடைந் தோரைத் தாங்கும் தகைமையாளன் மாமல்லன்; அற்றார்க்கும் அலந்தார்க்கும் உற்ற தோழன்; ஆதலால், தன்னந் தனியனாய் வந்து தஞ்சமடைந்த மானவர்மன் நிலை கண்டு மனம் இரங்கினான்; அவனது மனக்கவலையை மாற்றுவதாக வாக்களித்தான். அதன் பொருட்டு உன் துறைமுகத்தினின்று புறப்பட்டது தமிழ்ச் சேனை; மாற்றாருடன் போர்புரிந்தது; வெற்றி பெற்றது. மானவர்மன் இலங்கைக்கு அரசன் ஆயினான். அவன் மானங்காத்த பெருமை உனக்கும் உரியதன்றோ?

"
நல் வாழ்வு பெற்ற மல்லை நகரமே! இலங்கையில் வெற்றி மாலை சூடிய பெரும்படை வீர முழக்கத்துடன், 'மல்லன் வாழ்க, வாழ்க' என்று வாழ்த்திக் கொண்டு, மரக்கலங்களில் இங்கு வந்த காட்சியைக் கண்டவர் மறப்பரோ? + பொன்னையும், மணியையும், பொருளையும், போர்க்களிறுகளையும் சுமந்து நெளிந்து உன் துறைமுகத்தை நண்ணிய கப்பல்களின் மாட்சி சொல்லுந் தன்மையதோ? இவையெல்லாம் மல்லையங் கரையிலே பள்ளி கொண்ட மாதவன் செயலன்றோ?

+"புலங்கொள்நிதிக் குவையோடு       புழைக்கைம்மாக் களிற்றினமும்
நலங்கொள்நவ மணிக்குவையும்
     
சுமந்தெங்கும் நான்றொசிந்து கலங்கள்இயங் கும்மல்லைக்
     
கடல்மல்லைத் தலசயனம்
வலங்கொள்மனத் தாரவரை
     
வலங்கொள்என் மடநெஞ்சே"
      -
திருமங்கை மன்னன் திருப்பாசுரம்.


"
மன்னர் போற்றும் மணிநகரே! வெற்றி மேல் வெற்றி பெற்ற மாமல்லன் உன்னை அழகு செய்யத் தலைப்பட்டான்; உன் கரும்பாறைகளை யெல்லாம் கலைக்கோயிலாகக் கருதினான். அவன் ஆணை தலைக் கொண்டு கற்பணியில் வல்ல சிறிபியர் கைசெய்யத் தொடங்கினர். அன்னார் ஆக்கிய நற்பணியின் அழகு தான் என்னே! இதோ, ஒன்றையொன்று அடுத்து அடுக்கடுக்காக உயர்ந்து நிற்கும் ஐந்து திருக்கோயில்களும் தமிழ் நாட்டுச் சிற்பக் கலையின் சீர்மைக்கு அழியாத சான்றாகுமல்லவா? இவற்றின் மருங்கேயுள்ள குகைக்கோயிலின் சிற்பத் திறனைத்தான் என்னென்று சொல்வேன்? இங்கு +ஏனத்தின் உருவாகி எம்பெருமான் காட்சி தருகின்றான். ஏன வடிவத்தில் அமைந்த எம் இறைவனது ஞான ஒளியைக் கண்டோர், இவ் வூனப் பிறவியை அறுத்து அந்தமில் இன்பம் அடைவரல்லரோ? ஏனக் கோயிலை அடுத்து அமைந்துள்ளது ஈசன் கோயில். அங்குள்ள கல்லோவியத்தின் செம்மையைச் சொல்லவுங் கூடுமோ? போர்க் கோலம் கொண்ட பராசக்தி, சங்கு சக்கரம் ஏந்தி, சிங்கத்தின்மீ தமர்ந்து எருமைத் தலையுடைய அசுரன் ஒருவனைத் தாக்கும் தன்மையில் அமைந்த அவ்வடிவம் என் உள்ளத்தை அள்ளுகின்றதே!
----------
+
ஏனம் = வராகம்.

"ஏனத்தின் உருவாகி நிலமங்கை எழில்கொண்டான்
ஞானத்தின் ஒளியுருவை நினைவார் என் நாயகரே"
      -
திருமங்கை மன்னன் திருப்பாசுரம்,


இம் மட்டோ! மாயக் கண்ணன்-மணிவண்ணன்-கோவர்த் தனகிரியைக் குடையாகப் பிடித்துக் கோகுலத்தைக் காத்த கருணை அடுத்த பாறையில் வடிக்கப் பெற்றுள்ளது. 'கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக் காத்தானை, எம்பெருமானைக் கண்டுகொண்டேன்' அக் கல்லோவியத்தில்! கண்ணன் கருணையால் கவலை நீத்த கோகுலத்தில் ஆயர் குழலூதும் அழகும், கன்றினிடம் அன்புடைய கறவைப் பசு மனமுவந்து இடையர்க்குப் பால் தரும் மாண்பும் அக்கல்லில் அமைந்து இனிய காட்சி தருகின்றனவே! அதன் மருங்கிலுள்ள பாறையிலே அருந்தவத்தின் கோலம் இலங்குகின்றது. ஒற்றைக் காலை ஊன்றி, உச்சிமேற் கைகூப்பி, வற்றிய மேனிய னாய் நற்றவம் புரியும் ஒரு மாதவன் வடிவம் அழகாக அக் கல்லில் வடிக்கப் பட்டிருக்கின்றது. அவனது அருந்தவத்தின் செம்மையால் சுற்றும் முற்றும் அமைதியே நிலவுகின்றது. எத்தனை கலைவாணர் கருத்து இக் கற்பனையில் அமைந்துள்ளதோ?

"
நல்லோர் ஏத்தும் மல்லைமா நகரே! உன்னைக் காணப் பெற்றோர் வெம்மை நீத்துச் செம்மை யடைவர்; பிணக்கம் ஒழித்து இணக்கம் எய்துவர். உன் கடற்கரைக் கோயிலிலே கண்ணுதலோனும் கமலக் கண்ணனும் இணங்கி நின்று இன்பக் காட்சி தருகின்றனர். இதைக் கண்டும் இவ்வுலகம் பிணக்க நெறியிற் செல்லுதல் பேதைமை யன்றோ?

"பிணங்களிடு காடதனுள்
     
நடமாடு பிஞ்ஞகனோடு
இணங்குதிருச் சக்கரத்தெம்
     
பெருமானார்க் கிடம்விசும்பில்
கணங்கள் இயங் கும்மல்லை
     
கடல்மல்லைத் தலசயனம்
வணங்குமனத் தாரவரை
     
வணங்குஎன் தன்மடநெஞ்சே"


என்று உருக்கமாகப் பாடிக்கொண்டு திருக்கோயிலின் உள்ளே சென்றார் திருமங்கையாழ்வார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

நட்பியல்(Natpiyal)

2.3

Allainace

2.3,20

கள்ளுண்ணாமை

(kaL  uNNAmai)

2.3.20

Avoiding Drunkkenness

Avoid drunkenness and addiction which benumb senses and lead to vileness, penury, shame and insanity

குறள் எண்  928

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

kaLiththaRiyen enbathu kaivduga nenjaththu

oLiththathU-vum aange migum

No more in secret drink, and then deny thy hidden fraud;
What in thy mind lies hid shall soon be known abroad.

பொருள்

Meaning

கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal.

இன்றைய பொன்மொழி

அழகு ஆற்றலுடையதுதான் ஆனால் அதைவிட ஆற்றலுடையது பணமே. அதைவிடவும்  ஆற்றலுடையது அறிவு.     

Member to Members

Commercial shop/office space at Mayur Vihar - Phase III for sale : The  exact address of the same is : Vardhman Mayur Plaza, 1st Floor , Shop no : 16, behind DDA MIG Flats, Mayur Vihar Phase III, Delhi. The size of the flat is 100 sq ft, which is ideal for professionals who wants  to have their own own office, or to Doctors, who want to open their clinic, etc. I would like to sell this flat to own people . Those interested may  contact  dMr.Venkatesh  on numbers : 98111 61370 / 0120 4221 335 .  

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enbling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to
avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: